கி.ஜனார்த்தனன்
சிங்கப்பூர் கடையநல்லூர் முஸ்லிம் லீக்கும் இம்புரோஃப் அமைப்பும் இரண்டாவது முறையாக ஏற்பாடு செய்த சமய நல்லிணக்க நிகழ்வு, இம்முறை நோன்பு துறப்பு நிகழ்ச்சி யாக நடந்தேறியது.
சென்ற சனிக்கிழமை மொறு, ெமாறு புரோட்டாவைக் குழம்புடன் மென்று அவர்கள் நோன்பு துறப்பைக் கொண்டாடினர்.
கிளமெண்டி வட்டாரத்தில் உள்ள 'புரோட்டா எலே' உணவ கத்தில் நடந்த அந்த நிகழ்ச்சியில் சுமார் 35 பேர் கலந்துகொண்டனர்.
இவர்கள் ஐந்து, ஐந்து பேராக அமர்ந்த மேசைகளுக்கு இடையே பாதுகாப்பு இடைவெளி இருந்தது.
அதே சமயத்தில் முஸ்லிம்களும் மற்ற சமயத்தவர்களும் கலந்து அமர்ந்திருந்ததால் அவர்களிடையே நெருக்கம் காணப்பட்டது.
சிங்கப்பூர் கடையநல்லூர் முஸ்லிம் லீக்குக்கும் இம்புரோஃப் அமைப்புக்கும் தலைவரான ராஜ் முகம்மது, நிகழ்ச்சியில் தொடக்க உரை ஆற்றி னார்.
அதன் பிறகு 'காஹுட்' இணைய விளையாட்டில் நடந்த கேள்வி அங்கத்தில் கத்தோலிக்கர்களின் 'ஆஷ் வெட்னஸ்டே', 'யூதர்களின் 'பாஸ்ஓவர்', இந்துக்களின் 'நவராத்திரி' உள்ளிட்ட எல்லா சமய வழக்கங்களைப் பற்றிய அறிவு சோதிக்கப்பட்டது.
நோன்பு துறக்கும்போது பேரீச்சம் பழங்களைப் பயன்படுத்துவது, நோன்புக் கஞ்சி குடிப்பது போன்ற வழக்கங்களுக்கும் விளக்கம் கொடுக்கப்பட்டது. விருந்து முடிந்த பிறகு ஒவ்வொரு மேசையிலிருந்தும் ஒருவர் நின்று, 'சேயிங் கிரேஸ்' என்ற கிறிஸ்துவ வழக்கப்படி தமது நன்றி உணர்வை வெளிப்படுத்த வாய்ப்பு வழங்கப்பட்டது. துணைத் தலைவர் பசிர் அமிர் அனைவருக்கும் நன்றி கூறினார்.
வெவ்வேறு இன, சமயத்தைச் சேர்ந்தவர்களுடன் பழகும் வாய்ப்பை இந்நிகழ்ச்சி வழங்கியது என்று நிதித்துறை பணியாளர் மிர் ராஸா ஷா ஆசிப் அலி, 24, தெரிவித்தார்.
"சிங்கப்பூரின் ஆகப்பழைய பள்ளிவாசல் 'ஓமர் கம்போங் மலாக்கா' என்பதை இப்போதுதான் அறிந்துகொண்டேன்," என்றார் தகவல் தொழில்நுட்ப நிபுணர் சுவான் யூ, 31. எதிர்பார்த்ததைவிட அனைவரும் ஒருவரோடு ஒருவர் இயல்பாகப் பழகியதாக நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களில் ஒருவரான ஹஃபீஸா பீவி தெரிவித்தார்.