தேசிய தினத்தையொட்டி ஆகஸ்ட் 4ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 13ஆம் தேதி வரையில் ஜோயாலுக்காஸ் நகைக்கடைகளில் ‘ஜிஎஸ்டி’ இல்லாச் சிறப்பு விற்பனை நடைபெறுகிறது.
தங்கம், வைரம், போல்கி, முத்து உள்ளிட்ட அனைத்து நகைகளையும் இந்தச் சிறப்பு விற்பனையில் ‘ஜிஎஸ்டி’ செலுத்தாமல் வாங்கலாம்.
தேசிய தினத்தையொட்டி சிங்கப்பூர் வாடிக்கையாளர்கள், ஜிஎஸ்டி இல்லாமல் நகை ஜோயாலுக்காஸ் வாங்க வாய்ப்பளிப்பதில் மகிழ்ச்சி அடைவதாக உலகப் பிரபலமான நகைக்கடையின் தலைவரும் நிர்வாக இயக்குநருமான திரு ஜோய் ஆலுக்காஸ் தெரிவித்தார்.
ஜோயாலுக்காஸ் ஒவ்வொருவரின் ரசனைக்கும் ஏற்றவாறு பலதரப்பட்ட தேர்வை வழங்குகிறது. இந்த குறிப்பிடத்தக்க வாய்ப்பைப் பயன்படுத்தி விரும்பும் நகைகளை சிறப்பு விலையில் வாங்கலாம். சிங்கப்பூரிலுள்ள எல்லா ஜோயாலுக்காஸ் கடைகளிலும் இந்தச் சிறப்பு விற்பனையில் நகை வாங்கலாம்.