மலேசிய அரசாங்கம் 8.5 பில்லியன் வெள்ளி செலவில் புதிய துறைமுகம் ஒன்றைக் கட்டவுள்ளதாக அறிவித்துள்ளது.
கொள்கலன்களையும் சரக்குப் போக்குவரத்தையும் அதிக அளவில் கையாளும் நோக்கில், கேரி தீவில் திறன்மிக்க துறைமுகத்தை அமைக்கவுள்ளது மலேசியா.
அனைத்துலக வர்த்தக வளர்ச்சியை கருத்தில் கொண்டு புதிய துறைமுகத்தைக் கட்டும் மலேசியா வட்டார அளவிலும் பெரிய துறைமுகமாக விளங்க முயற்சி செய்கிறது.
ஏற்கெனவே சிங்கப்பூர், தாய்லாந்து, வியட்நாம் ஆகிய வட்டார நாடுகள் தங்களது துறைமுகங்களை விரிவுபடுத்தி வருகின்றன.
துறைமுகம் தொடர்பான மேல்விவரங்கள் வரும் நாள்களில் வெளியிடப்படும் என்று கூறப்படுகிறது.
கிளாங் துறைமுகத்தில் போதுமான அளவு சரக்குப் போக்குவரத்து இல்லாத காரணத்தால் 2017ஆம் ஆண்டு இத்திட்டம் கைவிடப்பட்டது.
புதிய துறைமுகம் ஆண்டிற்கு 40 மில்லியன் டன் சரக்கு கொள்கலன் போக்குவரத்தைக் கையாளும் திறனைக் கொண்டதாக இருக்கும் என்று மலேசியா குறிப்பிட்டுள்ளது.