மலேசியாவில் புதிதாக 142 பேருக்கு கொரோனா கிருமித்தொற்று

மலேசியாவில் புதிதாக 142 பேருக்கு கொரோனா கிருமித்தொற்று ஏற்பட்டிருப்பது இன்று (ஏப்ரல் 1) உறுதிசெய்யப்பட்டது.

அவர்களையும் சேர்த்து, அந்நாட்டில் கிருமித்தொற்றால் பாதிப்படைந்தவர்களின் எண்ணிக்கை 2,908ஆக உயர்ந்துள்ளது.

மலேசியாவில் கிருமித்தொற்று பாதிப்பால் மேலும் இருவர் உயிரிழந்தனர்.

80 வயது மாது ஒருவரும் 62 வயது ஆடவர் ஒருவரும் உயிரிழந்தனர். கோலாலம்பூர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர்களுக்கு நீரிழிவு நோயும் உயர் ரத்த அழுத்தமும் இருந்தன.

மலேசியாவில் கொரோனாவால் மரணம் அடைந்தவர்களின் எண்ணிக்கை 45ஆக அதிகரித்திருக்கிறது.

இன்று நிலவரப்படி, மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருபவர்களில் 102 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளனர். நேற்று பதிவான எண்ணிக்கையைவிட கூடுதலாக எட்டுப் பேர் தீவிர சிகிச்சை பிரிவில் உள்ளனர்.

மேற்கண்ட தகவல்களை சுகாதார அமைச்சின் தலைமை இயக்குநர் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா வெளியிட்டார்.

இன்று மட்டும் 108 பேர் கிருமித்தொற்று பாதிப்பிலிருந்து குணமடைந்து மருத்துவமனையிலிருந்து வெளியேறினர்.

அவர்களையும் சேர்த்து, கொவிட்-19 பாதிப்பிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 645ஆக உயர்ந்திருக்கிறது.

#மலேசியா #கொவிட்-19

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!