மலேசியாவில் புதிதாக 142 பேருக்கு கொரோனா கிருமித்தொற்று ஏற்பட்டிருப்பது இன்று (ஏப்ரல் 1) உறுதிசெய்யப்பட்டது.
அவர்களையும் சேர்த்து, அந்நாட்டில் கிருமித்தொற்றால் பாதிப்படைந்தவர்களின் எண்ணிக்கை 2,908ஆக உயர்ந்துள்ளது.
மலேசியாவில் கிருமித்தொற்று பாதிப்பால் மேலும் இருவர் உயிரிழந்தனர்.
80 வயது மாது ஒருவரும் 62 வயது ஆடவர் ஒருவரும் உயிரிழந்தனர். கோலாலம்பூர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர்களுக்கு நீரிழிவு நோயும் உயர் ரத்த அழுத்தமும் இருந்தன.
மலேசியாவில் கொரோனாவால் மரணம் அடைந்தவர்களின் எண்ணிக்கை 45ஆக அதிகரித்திருக்கிறது.
இன்று நிலவரப்படி, மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருபவர்களில் 102 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளனர். நேற்று பதிவான எண்ணிக்கையைவிட கூடுதலாக எட்டுப் பேர் தீவிர சிகிச்சை பிரிவில் உள்ளனர்.
மேற்கண்ட தகவல்களை சுகாதார அமைச்சின் தலைமை இயக்குநர் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா வெளியிட்டார்.
இன்று மட்டும் 108 பேர் கிருமித்தொற்று பாதிப்பிலிருந்து குணமடைந்து மருத்துவமனையிலிருந்து வெளியேறினர்.
அவர்களையும் சேர்த்து, கொவிட்-19 பாதிப்பிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 645ஆக உயர்ந்திருக்கிறது.
#மலேசியா #கொவிட்-19