மலேசியாவின் திரங்கானு மாநிலத்தின் ஜாலான் கோலா திரங்கானு-கிளந்தான் சாலையின் பக்கவாட்டில் தீயில் கருகிய பெண்ணின் உடல் ஒன்றைப் போலிசார் கண்டுபிடித்துள்ளனர். அந்த ஐம்பது வயது பெண் சில நாட்களுக்கு முன்னர் காணாமற்போனவர் என்று அறிவித்த போலிசார், தேடல் நடவடிக்கையில் ஈடுபட்டுவந்தனர்.
அந்தப் பெண் வேறொரு இடத்தில் கொலை செய்யப்பட்டு அவரது சடலம் சாலையோரத்தில் விட்டுச் செல்லப்பட்டிருக்கலாம் என்று அதிகாரிகள் கருதுகின்றனர்.
சம்பவத்திற்கான காரணமோ அதற்குப் பொறுப்பானவர்களோ இன்னமும் அறியப்படவில்லை. பெண்ணின் உடல் அவரது குடும்பத்தாரிடம் விரைவில் ஒப்படைக்கப்படும் எனத் தெரிவித்த போலிசார், விசாரணை தொடரும் என்றும் கூறினர்.