ஈப்போவிலுள்ள ஆகப் பழைய இந்திய பாரம்பரிய ஆடைக்கடையின் உரிமையாளரின் இறுதி ஊர்வலத்தில் குதிரைகளும் ஹெலிகாப்டர்களும் இடம்பெற்றதை மாநில போலிசார் விசாரித்து வருகின்றனர்.
இதன் தொடர்பில் போலிஸ் புகார் செய்யப்பட்டதாகவும் விதிமுறைகள் மீறப்பட்டதா என்பது ஆராயப்பட்டு வருவதாக காவல்துறையினர் தெரிவித்தனர். இதுபோன்ற ஊர்வலங்கள் வழக்கமாக இறுதிச் சடங்குகளில் அனுமதிக்கப்படவில்லை என்று ஹெலிகாப்டர்களைப் பயன்படுத்த மலேசியாவின் சிவில் விமானத்துறை ஆணையத்திடமிருந்து அனுமதியை பெற்றிருக்கவேண்டும் என்றும் இச்சம்பவத்தில் அதற்கான அனுமதி பெறப்படவில்லை என்றும் காவல்துறையினர் கூறினர்.
ஹெலிகாப்டர் ஒன்று தரைக்கு அருகே பறந்து மலர் இதழ்களைப் பொழிந்ததைச் சமூக ஊடகங்களில் வலம் வரும் சில காணொளிகள் காட்டுகின்றன.