சிங்கப்பூரின் இரண்டாவது கௌரவ மூத்த வழக்கறிஞராக சிங்கப்பூர் தேசியப் பல்கலைக்கழகத்தின் சட்டப் பேராசிரியர் இங் லோய் வீ லூன் நேற்று நியமனம் செய்யப்பட்டார். சட்டத் துறையில் அவரது சிறப்பு அறிவுத்திறனுக்கும் சட்டத் துறை, சட்ட நிபுணத்துவம் ஆகியவற்றின் மேம்பாட்டிற்காக அவர் ஆற்றிய பங்களிப்பை அங்கீகரிக்கும் நோக்கில் இந்தப் பதவி வழங்கப்பட்டிருப்பதாக சிங்கப்பூர் சட்டப் பயிலகம் தனது ஊடகச் செய்தியில் குறிப்பிட்டது. முதலாவது கௌரவ மூத்த வழக்கறிஞராக திரு இயோ டியோங் மின் 2012ஆம் ஆண்டில் நியமனம் செய்யப் பட்டார்.
நேற்று நடைபெற்ற சட்ட ஆண்டு தொடக்க நிகழ்ச்சியில் மூத்த வழக்கறிஞர் தேர்வுக் குழுவின் அங்கத்தினருமான தலைமை நீதிபதி சுந்தரேஷ் மேனன் இந்த நியமனத்தை அறிவித்தார். சட்டத் துறையில் மிகச் சிறந்த, வழக்கறிஞர்களை அங்கீகரிக்கும் பொருட்டு மூத்த வழக்கறிஞர் திட்டம் 1997ஆம் ஆண்டு தொடங் கப்பட்டது. இதுவரை மொத்தம் 76 மூத்த வழக்கறிஞர்கள் நியமிக்கப் பட்டுள்ளனர்.
சிங்கப்பூர் தேசியப் பல்கலைக் கழகத்தின் சட்டப் பேராசிரியர் இங் லோய் வீ லூன். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்