சென்னை: தமிழகத்தில் கொலை, கொள்ளை உள்ளிட்ட குற்றச் செயல்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக பாமக நிறுவனர் ராமதாஸ் குற்றம்சாட்டி உள்ளார். இதன் காரணமாக மக்கள் நிம்மதி இழந்து தவிப்பதாகவும் அவர் அறிக்கை ஒன்றில் கவ லையை வெளிப்படுத்தி உள்ளார். "தமிழகத்தில் சட்டம், ஒழுங்கை சீரமைக்கப் போவதாக கூறினார் ஜெயலலிதா. ஆனால் அவரது ஆட்சிக்காலத்தில் சட்டம் ஒழுங்கு நிலை சந்தி சிரிக்கிறது. "கடந்த 2011 முதல் 2015 வரை தமிழகத்தில் 9,948 கொலைகள், ஒரு லட்சம் கொள்ளைச் சம்பவங்கள் நடந்துள்ளன. இவற்றைக் கட்டுப்படுத்த காவல் துறை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை," என ராமதாஸ் புள்ளி விவரங்களை பட்டியலிட்டுள்ளார்.
சேலம் நீதிமன்ற வளாகத்தில் ரவுடியை கொலை செய்வதற்காக வெடிகுண்டு வீசித் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாகக் குறிப்பிட் டுள்ள அவர், இந்தத் தாக்குதலில் வழக்கறிஞர் உள்ளிட்ட இருவர் படுகாயம் அடைந்துள்ளனர் என் றும் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு எந்த அளவுக்கு சந்தி சிரிக்கிறது என்பதற்கு இச்சம்பவமே உதார ணம் என்றும் கூறியுள்ளார். பட்டப்பகலில் நீதிமன்ற வளா கத்தில் காவலுக்கு நின்று கொண்டிருந்த காவலர்கள் முன் னிலையில் தாக்குதல் சம்பவம் நடந்திருப்பதாகவும் நீதிமன்ற வளாகத்திலேயே வன்முறை கும் பல் வெடிகுண்டு, பயங்கர ஆயுதங்களுடன் வந்து தாக்குதல் நடத்திவிட்டு பொறுமையாக திரும்பிச் செல்ல முடிகிறது என்றும் தெரிவித்துள்ளார்.