சிங்கப்பூரின் SG50 கொண்டாட் டங்களை ஒட்டி கடந்த ஆண்டு சிங்கப்பூர் மலையாளிகள் சங்கம் வசதி குறைந்த மாணவர்களின் உயர்கல்விக்கு உதவுவதற்காக $500,000 நிதி திரட்டியிருந்தது. அந்த நிதி சிங்கப்பூர் மலையாளி நிதி உதவியாக ஒதுக்கப்பட்டு, தேசியப் பல்கலைக் கழகம் அதைத் தகுதியுள்ள மாணவர்களுக்கு வழங்கும். வசதி குறைந்த குடும்பங்களைச் சேர்ந்த சிங்கப்பூர் அல்லது நிரந்தரவாசிகள் இந்த நிதி உதவிக்குத் தகுதி பெறலாம். எனினும் இந்திய மாணவர்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படும்.
இந்தக் கல்வி உதவி நிதித் திரட்டுக்கு நிதி கொடுத்து உதவியோருக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக சிங்கப்பூர் மலையாளிகள் சங்கம் ஆர்க்கிட் கண்ட்ரி கிளப்பில் கடந்த வெள்ளிக்கிழமை இரவு விருந்துபசரிப்பு நிகழ்ச்சி ஒன்றுக்கு ஏற்பாடு செய்திருந்தது.
சிங்கப்பூர் மலையாளிகள் சங்கம் திரட்டிய நிதிக்கான காசோலை யைப் பெற்றுக்கொண்டார் அமைச்சர் ஓங் யி காங் (நடுவில்). அவருடன் நாடாளுமன்ற உறுப்பினர் விக்ரம் நாயர் (வலமிருந்து இரண்டாவது). படம்: சிங்கப்பூர் மலையாளிகள் சங்கம்