சென்னை: திமுக மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழியை தமிழக உளவுத்துறை கண்காணிப்பதாக ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின் றன. தமிழகம் முழுவதும் உள்ள பல்வேறு சாதி அமைப்புகளை திமுகவுக்கு ஆதரவாக மாற்றும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார் கனிமொழி. இதையடுத்தே அவ ரது செயல்பாடுகளை கவனிக்கும் படி உளவுத்துறைக்கு ஆட்சி மேலி டம் உத்தரவிட்டிருப்பதாக தமிழக ஊடகங்கள் தெரிவிக்கின்றன. மீண்டும் திமுக ஆட்சி அமைவதற்காக தன்னால் ஆன பங்க ளிப்பைச் செய்து வருகிறார் கனி மொழி.
ஸ்பெக்ட்ரம் வழக்கில் பிணைபெற்ற பின்னர் கட்சி நடவடிக்கைகளில் தீவிரம் காட்டத் தொடங்கியவருக்கு மீண்டும் மாநிலங்களவை உறுப்பினர் பதவி வழங்கப்பட்டது. மேலும் திமுகவின் மகளிரணி செயலராகவும் பொறுப் பேற்றுக் கொண்டார். மு.க.ஸ்டாலின் முதல்வராக எந்தவித எதிர்ப்பும் காட்டாததால் அவரது ஆதர வும் கனிமொழிக்கு எளிதில் கிடைத்துள்ளது. இதையடுத்து தென்மாவட்டங் களிலும் வடமாவட்டங்களிலும் திமுகவை பலப்படுத்தும் பணியை ஸ்டாலின் ஒப்புதலுடன் கனி மொழிக்கு திமுக தலைவர் கருணாநிதி வழங்கி இருப்பதாகக் கூறப்படுகிறது.