பாகிஸ்தானில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம் இஸ்லாமாபாத்: பாகிஸ்தானின் பஞ்சாப் மாநில ஆளுநரை சுட்டுக்கொன்ற மும்தாஜ் காத்ரி என்பவருக்கு நேற்று அதிகாலை மரண தண்டனை நிறைவேற்றப் பட்டதையடுத்து அவரின் ஆதரவாளர்கள் காத்ரியின் வீட்டுக்கு முன்பு ஒன்றுகூடினர். காத்ரிக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டதைக் கண்டித்து அவரது ஆதரவாளர்கள் ஆர்ப் பாட்டங்கள் மற்றும் கலவரங்களில் ஈடுபடக்கூடும் என்று எதிர்பார்க் கப்பட்டதால் போலிசார், நாடு முழுவதும் பாதுகாப்பை வலுப் படுத்தினர். குறிப்பாக தலைநகர் இஸ்லாமாபாத் அருகே கலகத் தடுப்பு போலிசார் குவிக்கப் பட்டனர்.
பாகிஸ்தானில் நடைமுறையில் இருக்கும் தெய்வ நிந்தனை சட்டத்தை மாற்றியமைக்க வேண் டும் என்று குரல் கொடுத்துவந்த சீர்திருத்தவாதியான பஞ்சாப் மாநில ஆளுநர் சல்மான் டஸீர் என்பவரை அவரது பாதுகாவலரும் தீவிரக் கொள்கையுடையவருமான மும்தாஜ் காத்ரி கடந்த -2011ஆம் ஆண்டு சுட்டுக்கொன்றார். இந்த கொலை வழக்கில் காத்ரிக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்தது.
மும்தாஜ் காத்ரிக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டதையடுத்து அவரின் ஆதரவாளர்கள் ஓர் நெடுஞ்சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். படம்: ஏஎஃப்பி