2013 முதல் 2015 வரை வீடு இல்லாத 543 தனிநபர்களுக்கும் 374 குடும்பங்களுக்கும் சமுதாய குடும்ப மேம்பாட்டு அமைச்சு ஆதரவும் தங்குவதற்கு இடமும் அளித்துள்ளது என்று சமுதாய குடும்ப மேம்பாட்டு அமைச்சின் நாடாளுமன்றச் செயலாளர் முகம்மது ஃபைசால் இப்ராஹிம் நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். இவர்களில் சிலர் கடன் அல்லது மணமுறிவு காரணமாகத் தங்கள் வீடுகளை விற்கும் சூழ்நிலை ஏற்பட்டது.
சிலருக்கு குடும்பத்தினருடன் ஏற்பட்ட விரிசல் போன்ற காரணங்களால் தங்கள் வீடுகளில் தொடர்ந்து வசிக்க முடியாத நிலை ஏற்பட்டது என்று அவர் கூறினார். அமைச்சின் உதவி பெற்றவர்களில் வாடகை வீடு கோரி விண்ணப்பம் செய்தவர்களில் பாதி பேருக்கு வாடகை வீடுகள் கிடைத்தன. விண்ணப்பத்தில் தோல்வி அடைந்தவர்களுக்கு வீடு வாங்கும் தகுதி இருந்ததாகவும் குடும்ப ஆதரவு போன்ற தெரிவுகள் இருந்ததாகவும் திரு ஃபைசால் தெரிவித்தார்.