வாடகை வீடு கோரி­ய­வர்­களில் 50 விழுக்­காட்­டி­னர் வீடு பெற்­ற­னர்

2013 முதல் 2015 வரை வீடு இல்லாத 543 தனி­ந­பர்­களுக்­கும் 374 குடும்பங்களுக்­கும் சமுதாய குடும்ப மேம்பாட்டு அமைச்சு ஆத­ர­வும் தங்­கு­வதற்கு இடமும் அளித்­துள்­ளது என்று சமுதாய குடும்ப மேம்பாட்டு அமைச்­சின் நாடா­ளு­மன்றச் செய­லா­ளர் முகம்­மது ஃபைசால் இப்­ரா­ஹிம் நாடா­ளு­மன்றத்­தில் தெரி­வித்­தார். இவர்­களில் சிலர் கடன் அல்லது மண­மு­றிவு கார­ண­மா­கத் தங்கள் வீடுகளை விற்கும் சூழ்நிலை ஏற்­பட்­டது.

சில­ருக்கு குடும்பத்­தி­ன­ரு­டன் ஏற்­பட்ட விரிசல் போன்ற காரணங்களால் தங்கள் வீடு­களில் தொடர்ந்து வசிக்க முடியாத நிலை ஏற்­பட்­டது என்று அவர் கூறினார். அமைச்­சின் உதவி பெற்­ற­வர்­களில் வாடகை வீடு கோரி விண்­ணப்­பம் செய்­த­வர்­களில் பாதி பேருக்கு வாடகை வீடுகள் கிடைத்­தன. விண்­ணப்­பத்­தில் தோல்வி அடைந்த­வர்­களுக்கு வீடு வாங்கும் தகுதி இருந்த­தா­க­வும் குடும்ப ஆதரவு போன்ற தெரி­வு­கள் இருந்த­தா­க­வும் திரு ஃபைசால் தெரி­வித்­தார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!