5.21 மி. பயணிகளைக் கையாண்ட சாங்கி விமான நிலையம்

சாங்கி விமான நிலையம் சென்ற ஜூன் மாதத்தில் 5.21 மில்லியன் பயணிகளைக் கையாண்டுள்ளது. 2016 ஜூன் மாதத்துடன் ஒப்பு நோக்க இது 7.7% அதிகம். எல்லா வட்டாரங்களில் இருந் தும் சிங்கப்பூருக்கு வந்து சென்ற பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்ததே இந்த உயர்வுக்குக் காரணம் என சாங்கி விமான நிலையக் குழுமம் தெரிவித்தது. ஆக அதிகமாக, ஆண்டு அடிப்படையில் பார்க்கும்போது இந்தியப் பயணிகளின் எண் ணிக்கை 25% கூடியுள்ளது. அதற்கடுத்ததாக, சிங்கப்பூருக்கு வந்து சென்ற வியட்னாமியப் பயணிகளின் எண்ணிக்கை 12% அதிகரித்தது. கடந்த ஜூன் மாதத்தில் ஆக அதிகமாக பேங்காக் நகரத்திற்கும் அதற்கு அடுத்தபடியாக கோலா லம்பூருக்கும் விமானச் சேவைகள் இடம்பெற்றன.

இவ்வாண்டின் முதல் ஆறு மாத காலத்தில் சாங்கி விமான நிலையம் 5.7% கூடுதலாக, அதாவது 30.4 மி. பயணிகளைக் கையாண்டுள்ளது. தென்கிழக்கா சியா, வடகிழக்காசியா, தெற்கு ஆசியா ஆகிய வட்டாரங்களில் இருந்து அதிகமானோர் வந்து சென்றதே இதற்குக் காரணம் என்று கூறப்பட்டது. இந்தக் காலகட்டத்தில் மட்டும் சாங்கி விமான நிலையம் வழியாக இரண்டு மில்லியனுக்கும் மேற்பட் டோர் இந்தியா-சிங்கப்பூர் இடையே பயணம் செய்தனர். அதேபோல, வந்து சென்ற விமானங்களின் எண்ணிக்கையும் 3%, அதாவது 30,920 ஆக உயர்ந்தது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!