யங்கூன்: ராணுவ ஆட்சியின்கீழ் மியன்மாரில் கஞ்சா செடி வளர்ப்பு சென்ற ஆண்டு 33 விழுக்காடு அதிகரித்துள்ளது. போதை மருந்து, குற்றங்களுக்கு எதிரான ஐக்கிய நாட்டு அமைப்பின் அலுவலகம் நேற்று அத்தகவலைத் தெரிவித்தது.
முந்தைய ஆறு ஆண்டுகளில் கஞ்சா செடி வளர்ப்பு குறைந்து வந்ததாகவும் ராணுவ ஆட்சியில் மியன்மாரில் ஏற்பட்ட சமூக, பொருளியல் குழப்பம் தலைகீழ் மாற்றத்துக்குக் காரணம் என்றும் அலுவலகம் கூறியது.
மியன்மாரில் கடந்தாண்டு கஞ்சா வளர்க்கப்பட்ட நிலம், மூன்றில் ஒரு பங்கு கூடி, 40,100 ஹெக்டெர் ஆனது. கஞ்சா விளைச்சல் ஒரு ஹெக்டருக்கு 41 விழுக்காடு கூடி, சுமார் 20 கிலோகிராம் ஆனது. 2002லிருந்து இதுவே ஆக அதிக விளைச்சல் என்று அலுவலகம் கூறியது.