பத்துமலை: கொவிட்-19 பரவலின்போது தொய்வடைந்த தைப்பூசத் திருவிழா, மலேசியாவில் நேற்று பல்லாயிரம் பேர் பங்கெடுக்க, கோலாகலமாகக் கொண்டாடப்பட்டுள்ளது.
சிறப்புவாய்ந்த பத்துமலை ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி கோவிலில் இரண்டு நாள்களாக 150,000க்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்துகொண்டதாக கோவில் தலைவர் பி. கண்ணதாசன் தி ஸ்டார் நாளிதழிடம் கூறினார். பத்துமலை கோவிலுக்கு செல்வார் என்று எதிர்பார்க்கப்பட்ட பிரதமர் அன்வார் இப்ராகிம் உடல்நலக் குறைவால் செல்லவில்லை.
திரு அன்வார் தமது ஃபேஸ்புக் பக்கத்தில் இந்துக் களுக்கு தம் தைப்பூச வாழ்த்து களைப் பகிர்ந்துகொண்டார். இந்து ஆலயங்களின் நிர்வாகக் குழுவினரை அவர் சந்திக்க விரும்பியதாக மனிதவள அமைச்சர் வி. சிவகுமார் தெரிவித்தார்.
ஜோகூரின் ஸ்கூடாயில் உள்ள அருள்மிகு பாலசுப்பிர மணியர் கோவிலுக்கு ஜோகூர் சுல்தான் இப்ராகிம் இஸ்மாயில் சென்றார். ஜோகூர் புற்று நோய் அறநிதிக்கு கோவில் நிர்வாகம் அளித்த 5,000 ரிங்கிட் நன்கொடை, வெள்ளிக்குடம் ஆகியவற்றை அவர் பெற்றுக்கொண்டார்.
பினாங்கு தண்ணீர்மலை கோவில், ஈப்போ கல்லுமலை கோவில் உள்ளிட்ட மற்ற முக்கிய முருகன் கோயில்களிலும் தைப்பூசத் திருவிழா சிறப்பாக நடைபெற்றது.