செயலற்றுப் போயிருக்கும் 'த ரியல் சிங்கப்பூர்' சமூக அரசியல் இணையத் தளத்தின் தொடர் பிலான வழக்கில் இருவரில் ஒருவர் குற்றச்சாட்டுகளை ஏற்றுக் கொள்வார் என்று எதிர்பார்க்கப் படுகிறது. வழக்கு விசாரணை நேற்று தொடங்கிய வேளையில் அய் டகாகி, 23, தம் மீது சுமத்தப் பட்ட குற்றச்சாட்டை ஒப்புக் கொள்வதற்கான அறிகுறியை வெளிப்படுத்தியிருக்கிறார். இவரும் இவரது கணவர் யாங் கைஹெங் கும், 27, ஏழு குற்றச்சாட்டை எதிர் நோக்குகின்றனர்.
2013 அக்டோபர் முதல் கடந்த ஆண்டு பிப்ரவரி வரையில் சிங்கப் பூரின் பல இன மக்களிடையே வேறுபாடுகளைத் தூண்டிவிடும் வகையில் கட்டுரைகள் வெளி யிடப்பட்டதால் அவர்கள் மீது தேச நிந்தனைக் குற்றம் சுமத்தப் பட்டுள்ளது. வரும் வெள்ளிக் கிழமை யாங் மீதான வழக்கு விசாரணை நடைபெறுகிறது. இதற்கிடையே அரசு தரப்பு துணை வழக்கறிஞர் ஜி. கண் ணன், அவ்விருவரும் விரோ தத்தை தூண்டும் முயற்சியில் வெற்றி பெற்று லாபம் அடைந்து உள்ளனர் என்பதை சுட்டிக் காட் டினார். இருவரின் வங்கிக் கணக் கின் அடிப்படையில் மாதம் ஆஸ் திரேலிய டாலர் 20,000 முதல் 50,000 வரை வருவாய் ஈட்டினர் என்றும் அவர் சொன்னார்.