சிட்னி: ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் ஒரு துப்பாக்கிக் காரன் சுட்டதில் ஒருவர் கொல் லப்பட்தாகவும் இருவர் காயம் அடைந்ததாகவும் போலிசார் கூறினர். அந்தத் துப்பாக்கிக்காரன் பின்னர் அக்கட்டடத்தினுள் இறந்து கிடந்ததாக போலிஸ் உயர் அதிகாரி ஒருவர் கூறினார். சிட்னி புறநகர் பகுதியில் உள்ள ஒரு தொழிற்சாலைக் கட்டடத்தில் நேற்று அந்த சம்பவம் நடந்தது. துப்பாக்கிச் சூட்டு சம்பவம் பற்றி அறிந்த போலிசார் அந்த இடத்திற்கு விரைந்து வந்தனர். அந்த இடத்தில் ஒருவர் இறந்து கிடந்ததாகவும் மேலும் இருவர் காயமுற்றிருந்ததாகவும் போலிசார் கூறினர். காயமுற்ற இருவர் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
அக்கட்டடத்தை சுற்றி வளைத்த போலிசார் 6 மணி நேரத்திற்குப் பிறகு அந்தக் கட்டடத்தினுள் அதிரடியாக நுழைந்தனர். அங்கு 33 வயது மதிக்கக்தக்க ஒருவன் இறந்து கிடந்ததாகவும் அவன் தன்னைத்தானே சுட்டுக்கொண்டு இறந்திருக்க வேண்டும் என்றும் போலிசார் கூறினர். அக்கட்டடத்திலிருந்து மூவர் வெளியேறுவதை போலிசார் பார்த்தனர். அந்த மூவர் துப் பாக்கிக்காரனால் பிணைப்பிடிக்க வைக்கப்பட்டிருந்தனரா அல்லது அவர்கள் அந்தத் துப்பாக்கிக் காரனுக்குப் பயந்து அங்கு மறைந்திருந்தார்களா என்பது தெரியவில்லை. இந்த சம்பவம் மூன்று சகோதரர்கள் சம்பந்தப்பட்ட குடும்பத் தகராறு என்றும் பயங்கர வாத தொடர்புடைய சம்பவம் அல்ல என்றும் போலிசார் கூறியுள்ளனர். சிட்னியில் 2014ஆம் ஆண்டு நடந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தைத் தொடர்ந்து அங்கு போலிசார் விழிப்பு நிலையில் உள்ளனர்.
சிட்னி புறநகர் பகுதியில் நேற்று நடந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவம் பயங்கரவாத தொடர்புடையது அல்ல என்று போலிசார் தெரிவித்துள்ளனர். அங்குள்ள தொழிற்சாலைக் கட்டடத்தினுள் நுழைந்த ஒரு துப்பாக்கிக்காரன் ஒருவரை சுட்டுக்கொன்றான். மேலும் இருவரை சுட்டுக் காயப்படுத்தினான். அந்த துப்பாக்கிக்காரன் பின்னர் அக்கட்டடத்தினுள் இறந்து கிடந்ததாக போலிசார் கூறினார். அந்தத் துப்பாக்கிக்காரன் தன்னைத்தானே சுட்டுக்கொண்டு இறந்திருக்க வேண்டும் என்று நம்பப்படுகிறது. இந்நிலையில் அந்த இடத்திலிருந்து ஒரு சந்தேகப் பேர்வழியை கையில் விலங்கிட்டு போலிசார் அழைத்துச் செல்கின்றனர். படம்: ராய்ட்டர்ஸ்