புதுடெல்லி: ரயில்வே துறை ஊழியர்களின் அலட்சியம் காரணமாக கடந்த சில ஆண்டுகளில் 200க்கும் மேற்பட்ட ரயில் விபத்துகள் நேர்ந்துள்ளதாக ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ரயில் விபத்துகளுக்கான காரணங்கள் தொடர்பான விசாரணைக் குழுவின் ஆய்வறிக்கை அண்மையில் வெளியிடப்பட்டது. கடந்த 2012-13ஆம் நிதியாண்டிலிருந்து தற்போது வரை 292 ரயில் விபத்துகள் நேர்ந்துள்ளன.
இவற்றில், 204 விபத்துகள் ரயில்வே துறை ஊழியர்களின் கவனக்குறைவால் நடந்துள்ளன. விபத்துகளுக்குக் காரணமான 542 ஊழியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.