சென்னை: உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட 46 லட்சம் ரூபாய் ரொக்கப் பணத்தை பறக்கும் படையினர் அதிரடியாகப் பறிமுதல் செய்துள்ளனர். தமிழகத்தில் வரும் மே 16ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதையடுத்து மாநிலம் முழுவதும் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளன. வாக்காளர்களுக்குப் பண விநியோகம் நடப்பதைத் தடுக்கும் வகையில் மாநிலம் முழுவதும் தேர்தல் ஆணையத்தால் அமைக் கப்பட்டுள்ள பறக்கும் படையினர் அதிரடி சோதனை நடவடிக்கை களை மேற்கொண்டு வருகின்றனர்.
இச்சமயம் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டுசெல்லப்படும் ரொக்கப் பணம், நகைகள் ஆகி யவை உடனுக்குடன் பறிமுதல் செய்யப்படுகிறது. ஆவணங்களை ஒப்படைத்தால் மட்டுமே பறிமுதல் செய்யப்பட்டவை உரிமையாளரிடம் தரப்படுகிறது. இந்நிலையில் பல்வேறு இடங் களில் நடைபெற்ற சோதனை நடவடிக்கையின் மூலம் 46 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். நேற்று முன்தினம் ஒரே நாளில் கடலூர் மாவட்டத்தில் மட்டும் ரூ.8,72,000 பறிமுதல் செய்யப் பட்டது. கடந்த மூன்று தினங்களில் மட்டும் அம்மாவட்டத்தில் ரூ.16 லட்சம் பறிமுதல் ஆகியுள்ளது.
இதேபோல் ஓசூரில் நடந்த சோதனையின் போது, பெங்களூருவில் இருந்து உரிய ஆவ ணங்கள் இன்றி காரில் எடுத்து வரப்பட்ட ரூ.1.9 லட்சம் பணத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதற்கிடையே சென்னை ஓட்டேரி பகுதியில் பறக்கும் படை நடத்திய சோதனையின்போது அவ்வழியே காரில் வந்த வருமான வரித்துறை அதிகாரியிடம் இருந்து ரூ.23 லட்சம் பறிமுதலானது. முறையான ஆவணங்கள் எதையும் அந்த அதிகாரி காண் பிக்கவில்லை. இதையடுத்து அப் பணம் பறிமுதல் செய்யப்பட்டு அரசு கருவூலத்தில் வைக்கப்பட்டுள்ளது என்றும் முறையான ஆவணங்களைக் காண்பித்தபின் பணத்தை திரும்பப் பெற்றுச்செல்லு மாறு அந்த அதிகாரியிடம் கூறப் பட்டதாகவும் பறக்கும் படையினர் தெரிவித்தனர். இதற்கிடையே ஆளுங்கட்சிக்கு ஆதரவாக பறக் கும்படை செயல்படுவதாக திமுக குற்றம்சாட்டி உள்ளது.