லக்னோ: அயோத்தியில் கட்டப்படும் ராமர் கோயில் அடுத்த ஆண்டு திறக்கப்படுவதால் உள்கட்டமைப்புப் பணிகள் விரைவாக நடைபெற்று வருகின்றன.
அயோத்தியில் உள்ள ராமஜென்ம பூமியில் மிக நீண்ட போராட்டங்களுக்குப் பிறகு பிரமாண்டமான ராமர் கோயில் கட்டப்படுகிறது.
இந்தக் கோவில் அடுத்த ஆண்டு ஜனவரியில் திறக்கப்படு கிறது.
இதையொட்டி அயோத்தி நகர் முழுவதும் உள்கட்டமைப்புப் பணிகளை மாநில அரசு தீவிரப் படுத்தியுள்ளது.
அந்த வகையில் சகாதத்கஞ்சில் இருந்து நயா காட் செல்லும் 13 கி.மீ. நீள ராமர் பாதைப்பணிகள் விரைவுபடுத்தப்படவுள்ளன.
ராமஜென்ம பூமி பாதை முப்பது மீட்டரும் பக்திப் பாதை 14 மீட்டரும் அகலம் கொண்டவை. விமான நிலையம் மற்றும் ரயில் நிலையங்களும் விரிவாக்கம் செய்யப்படுகின்றன.
மேலும் ராமஜென்ம பூமி மற்றும் அனுமன்ஹார்கி கோயில் செல்லும் பக்தர்களுக்கு சாைல வசதிகள் முக்கியமானவை என்பதால் அந்த பணிகளும் தீவிரப் படுத்தப்பட்டுள்ளன.
இந்த நிலையில் பிரமாண்டமான கோவில், அதற்கான வசதி, அயோத்தி நகரின் விரிவாக்கம் மற்றும் மேம்பாட்டு பணிகளுக்கு வியாபாரிகள் தயக்கமின்றி தங்கள் கடைகள் இருக்கும் இடத்தை வழங்கி வருகின்றனர்.
அயோத்தி நகர விரிவாக்கப் பணிகளுக்காக அப்புறப்படுத்தப்படும் வியாபாரிகளுக்கு புதிய வணிக வளாகங்களில் கடைகள் ஒதுக்கப்படும் என்றும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.