நிதி அமைச்சர் ஹெங் சுவீ கியட் மார்ச் 24ஆம் தேதி ஆண்டு வரவுசெலவு திட்டத்தை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்கிறார். பொருளியலில் தீவிர கவனம் செலுத்தும், 'விவேக வரவுசெலவுத் திட்டமாக' இது இருக்கும் என அமைச்சர் கூறியுள்ளார். இந்த ஆண்டின் வரவுசெலவுத் திட்டம் புதிய அரசாங்கத்தின் முதல் வரவுசெலவுத் திட்டம் என்பதால், கடந்த அரசாங்கத்தின் போது கிடைத்த லாபம் சேமிப்பில் சேர்க்கப்படும். எனவே, நிதித்துறையில் விவேகமாக நடக்க வேண்டும் என்ற அமைச்சரின் கருத்து ஆச்சரியமளிக்க வில்லை என ஆய்வாளர்கள் தெரிவித்தனர். இதற்கிடையே, மூப்பு தொடர்பான நோய்களால் அவதியுறும் மூத்த குடிமக்களுக்கும் அவர்களைப் பராமரிக்கும் அவர்களது குடும்பத்தினருக்கும் அதிகம் செய்ய வேண்டும் என்பது மக்கள் செயல் கட்சியின் முதியோர் குழுவில் கோரிக்கை.
எல்டர்ஷீல்டை மேம்படுத்துவது, கடும் குறைபாடுள்ளோருக்கு தேசிய காப்புறுதி போன்றவை குழு முன்வைத்துள்ள பரிந்துரைகளில் சில. எல்டர்ஷீல்டை கட்டா யமாக்குவதும் அதில் ஒன்று. 2002ல் அத்திட்டம் அறிமுகமான போது, அவ்வாண்டில் 70 வயதும் அதற்கு மேல் இருந்தவர்களும் அதில் சேர்த்துக்கொள்ளபட வில்லை. இந்த வயது வரம்பை நீக்க வேண்டும் என்கிறது குழு. வரவுசெலவு திட்டத்திற்கான தனது கருத்துகளை நிதி அமைச்சிடமும் சுகாதார அமைச்சிடமும் மசெகவின் முதியோர் குழுத் தலைவரும் நாடாளுமன்ற நாயகருமான ஹலிமா யாக்கோப் அளித்தார்.