மதுரை: தேர்தலில் தனித்துப் போட்டியிடுவதென்பது தேமுதிகவின் விருப்பத்தைப் பொறுத்தது என்று மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார். ஒவ்வொரு கட்சிக்கும் முதல்வர் வேட்பாளரை அறிவிக்க உரிமையுண்டு என மதுரையில் செய்தியாளர்களிடம் பேசியபோது அவர் குறிப்பிட்டார்.
"பாஜகவின் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து நிர்வாகி களிடம் ஆலோசித்து முடிவு செய்யப்படும். ஒவ்வொரு கட்சிக் கும் முதல்வர் வேட்பாளரை அறிவிக்க உரிமையுள்ளது. ஆனால் தமிழகத்தில் மாற்றம் வரவேண்டும் என மக்கள் விரும்புகிறார்கள். அதற்கு மாறாக கட்சிகள் யோசிப்பது மக்களின் விருப்பத்துக்கு மாறாக அமையும்," என்று பொன்.ராதாகிருஷ்ணன் மேலும் தெரிவித்தார்.