மீண்டும் ஜோடி சேரும் ஜெய், அஞ்சலி

ஜெய் நடிப்பில் கடைசியாக வெளிவந்த படம் 'வலியவன்'. இதில் இவருக்கு ஜோடியாக ஆண்ட்ரியா நடித்திருந்தார். 'எங்கேயும் எப்போதும்' சரவணன் இப்படத்தை இயக்கியிருந்தார். இப்படத்தில் ஜெய் குத்துச்சண்டை வீரராக நடித்திருந்தார். இப்படத்தையடுத்து ஜெய் நடிப்பில் 'புகழ்' என்னும் படம் உருவாகியுள்ளது. இதன் படப்பிடிப்புகள் முடிந்து மார்ச் 18ஆம் தேதி வெளியாக உள்ளது. இந்நிலையில், ஜெய் அடுத்த படத்தில் நடிக்கத் தயாராகி விட்டார். புதிய படத்தில் அவருக்கு காவல்துறை அதிகாரி வேடமாம்.

அவரது ஜோடியாக அஞ்சலி நடிக்க இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. ஏற்கெனவே ஜெய், அஞ்சலி ஜோடி 'எங்கேயும் எப்போதும்' படத்தில் நடித்திருந்தார்கள். இப்படத்தில் இவர்களின் நடிப்பு அதிகம் பேசப்பட்டது. அதேபோல் இந்தப் படத்திலும் இருவருக்கும் கனமான கதாபாத்திரங்கள் அமைந்திருப்பதால் படம் வெற்றி பெறும் என்று கோடம்பாக்கத்தில் பேச்சு அடிபடுகிறது. இந்தப் படத்தின் கதையும் ரொம்ப வித்தியாசமாக இருக்கும் என்று விவரமறிந்தவர்கள் கூறுகின்றனர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!