சூச்சியின் கட்சி முன்மொழிந்த அதிபர் வேட்பாளரான டின் கியவ் மியன்மார் நாடாளு மன்றத்தில் வரலாறு காணாத அளவில் மொத்தம் 652 வாக்குகளில் 360 வாக்குகள் பெற்றுள்ளார். முதல் வாக்கை சூச்சி அளித்தார். வாக்களிப்பு முடிந்து வாக்கு கள் எண்ணப்பட்டு முடிவு அறி விக்கப் பட்டதும் நாடாளுமன்ற உறிப்பினர்கள் அனைவரும் உற்சாகக் கரவொலி எழுப்பினர். இந்த அமோக ஆதரவை அடுத்து மியன்மார் 50 ஆண்டு கால ராணுவ ஆட்சிக்குப் பிறகு ஜனநாயகத்தை நோக்கிய திசை யில் அடியெடுத்து வைத்திருக் கிறது. தேசிய ஜனநாயக லீக் கட்சியின் அதிபர் வேட்பாளரான 69 வயது டின் கியவ், சூச்சியின் உதவியாளரும் அவரது நீண்ட கால நண்பருமாவார்.
நாடாளுமன்ற இரு அவை களிலும் அமோக ஆதரவைப் பெறும் ஒருவரே அந்நாட்டின் அதிபராக அதிகாரப்பூர்வமாகத் தேர்ந்தெடுக்கப்படுவார் என்று சென்ற வாரம் தெரிவிக்கப்பட்டது. அதிபராவதற்கு மேலும் இருவர் போட்டிக் களத்தில் உள்ளனர். நாடாளுமன்ற மேலவையில் தேசிய ஜனநாயக லீக் கட்சி, சின் இனத்தைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் ஹென்ரி வான் தியுவை அதிபர் வேட்பாளராகப் பரிந்துரைத் துள்ளது. ஆனால், ராணுவம் வேட்பாளரை முன்மொழிய வில்லை. இருப்பினும் ஆங் சான் சூச்சியின் ஆதரவு இருப்பதாலும் தேசிய ஜனநாயக லீக் கட்சி யுடன் வலுவான குடும்பத் தொடர்பு இருப்பதாலும் டின் கியவ் அதிக வாக்குகளைப் பெற்று வெற்றி பெறுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.
மியன்மார் நாடாளுமன்ற வாக்கெடுப்புக்குப் பிறகு நேற்று திருவாட்டி ஆங் சான் சூச்சி, 70 (வலது) கிளம்புகையில் அவரை வழியனுப்பி வைத்தார் தேசிய ஜனநாயக லீக் கட்சியின் அதிபர் வேட்பாளரான 69 வயது டின் கியவ் (நடு). படம்: ராய்ட்டர்ஸ்