விருதுநகர்: மக்கள் பணியாளராகக் கருதப்பட வேண்டிய முதல்வரை இப்போது தெய்வமாக மாற்றிவிட்டதாக பாமக முதல்வர் வேட்பாளர் அன்புமணி தெரிவித்துள்ளார். விருதுநகரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அதிமுக ஆட்சியில் தமிழகத்தின் கடன் சுமை அதிகரித்துள்ளதாகக் குற்றம்சாட்டினார். "அதிமுக ஆட்சிக்கு வந்த போது தமிழக அரசின் கடன் ரூ.1 லட்சத்து ஆயிரம் கோடி; தற்போது அது 2 லட்சத்து 48 ஆயிரம் கோடியாக உயர்ந்துள்ளது. விளம்பரங்களுக்காக கோடி கோடியாக செலவழித்த 'விளம்பர அரசாக' அதிமுக அரசு உள்ளது," என்றார் அன்புமணி.
திமுக மீது மக்கள் நம்பிக்கை இழந்துவிட்டதாகக் குறிப்பிட்ட அவர், அதன் காரணமாகவே 66 வயதான அக்கட்சி, கூட்டணிக்காக ஏங்கி வருகிறது என்றார். "மாநில முதல்வர் என்பவர் மக்களின் வேலைக்காரர், பணியாளர். ஆனால் தற்போது முதல் வரைத் தெய்வமாக மாற்றிவிட்ட னர். நான் முதல்வரானால் மக் களைச் சீரழிக்கும் மதுவை ஒழிப் பேன். மிக்சி, கிரைண்டர், ஆட் டுக்குட்டி போன்ற இலவசங் களைத் தரமாட்டேன். மாறாக குழந்தைகளுக்குத் தரமான கல்வி, சுகாதாரம் கிடைக்கச் செய்வேன்," என்றார் அன்புமணி. தமிழகத்தில் 42 ஆயிரம் ஏரி கள் இருந்த நிலையில் தற்போது 38 ஆயிரம் ஏரிகள் மட்டுமே உள் ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.