சிட்னி: பணி நேரத்துக்குப் பிறகும் முதலாளிகளின் தேவையற்ற அழைப்புகளையும் தகவல்களையும் ஊழியர்கள் புறக்கணிப்பதை அனுமதிக்கும் புதிய சட்டத்தை ஆஸ்திரேலிய அரசாங்கம் அறிமுகப்படுத்தவுள்ளது.
இந்தச் சட்டம் நடப்புக்கு வந்தால் விதிமுறைகளை மீறும் முதலாளிகளுக்கு அபராதம் விதிக்கப்படலாம்.
தொடர்பை துண்டிக்கும் உரிமைக்கான உத்தேச சட்டத்தை ஆஸ்திரேலிய அரசாங்கம் நாடாளுமன்றத்தில் முன்வைத்துள்ளது.
இது, ஊழியர்களின் உரிமைகளையும் வேலை-வாழ்க்கையில் சமநிலை காணவும் உதவும் என்று அரசாங்கம் கூறுகிறது.
ஊழியர்கள் தங்களுடைய சாதனங்களை நிறுத்தி வைப்பதை அனுமதிக்கும் இதே போன்ற சட்டம் ஐரோப்பாவில் பிரான்ஸ், ஸ்பெயின் உள்ளிட்ட நாடுகளில் ஏற்கெனவே நடப்பில் உள்ளது.