பொங்கல் பண்டிகையையொட்டி தமிழகத்தில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் சென்னையில் உள்ள தனியார் கல்லூரியில் நேற்று முன்தினம் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. அப்போது அக்கல்லூரி மாணவிகள் பல்வேறு பாரம்பரிய விளையாட்டுகளை ஆடினர்.
தாவணி அணிந்த மாணவிகள், பொங்கல் வைத்து மகிழ்ந்ததுடன், பொங்கல் பானைகளைச் சுற்றி வந்து, கும்மியடித்து ஆடினர். இந்த நிகழ்வு தங்களுக்கு மிகுந்த உற்சாகத்தை தந்ததாக மாணவிகள் தெரிவித்தனர். படம்: சதீஷ்