பார்சிலோனா: சாம்பியன்ஸ் லீக் காற்பந்தாட்ட தொடரில் ஆர்சனலைப் பின்னுக்குத் தள்ளி 5=1 என்ற மொத்த கோல் எண்ணிக்கை அடிப்படையில் காலிறுதிக்கு முன்னேறியது பார்சிலோனோ. நேற்று நடந்த இரண்டாவது சுற்று ஆட்டத்தில் பார்சிலோனாவின் முக்கிய ஆட்டக்காரர்களான நெய்மார், சுவாரெஸ், மெஸ்ஸி ஆகிய மூவரும் தலா ஒரு கோல் அடித்தனர். முதல் பாதி ஆட்டத்தின் 18வது நிமிடத்தில் நெய்மார் தொடங்கிய கோல் கணக்கை 51வது நிமிடத்தில் சமன் செய்தார் ஆர்சனலின் எல்னி. ஆனால், அதன்பிறகு கிடைத்த சில வாய்ப்புகளைத் தவறவிட்டது ஆர்சனல். சுவாரெஸ் 65வது நிமிடத்திலும் மெஸ்ஸி 88வது நிமிடத்திலும் அடித்த கோல்கள் பார்சிலோனாவின் காலிறுதி வாய்ப்பை உறுதி செய்தது.
முதல் சுற்று ஆட்டத்தில் ஆர்சனல் கோல் எதுவும் அடிக்காததால், 2=0 என்ற கோல் கணக்கில் பார்சிலோனா முன்னிலையில் இருந்தது. இத்தொடரில் இருந்து வெளியேறியது மட்டுமல்லாமல் கடந்த வாரம் எஃப்ஏ கிண்ணத் தொடரில் இருந்தும் வெளியேறிய ஆர்சனலுக்கு இந்தப் பருவத்தில் கிண்ணத்தை வெல்லும் ஒரே வாய்ப்பு பிரிமியர் லீக் தொடரில் மட்டுமே உள்ளது. அதில் லெஸ்டர் குழுவைவிட 11 புள்ளிகள் பின் தங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.