ரஜினி நடித்த 'சந்திரமுகி' படத்தை மாபெரும் வெற்றிப் படமாகக் கொடுத்த பி.வாசு, அதையடுத்து ரஜினியை வைத்து இயக்கிய 'குசேலன்' படம் படு தோல்வியைத் தழுவியது. அதனால், பின்னர் தெலுங்கு, கன்னட மொழிகளில் படங்களை இயக்கி வந்தார். மேலும், மலையாள த்ரிஷ்யம் படத்தை ரவிச்சந்திரன், நவ்யா நாயரை வைத்து கன்னடத்தில் மறு தயாரிப்பு செய்தார் அவர். அதன் பிறகு, கன்னட 'சூப்பர் ஸ்டார்' சிவராஜ் குமார், வேதிகா நடிப்பில் அண்மையில் கன்னடத்தில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்றிருக்கும் படம் 'சிவலிங்கா' என்ற படத்தை இயக்கினார் பி.வாசு. எனவே, இப்படத்தைத் தமிழில் தயாரிக்கவும் அவர் திட்டமிட்டு உள்ளார்.
ஆனால், கன்னடத்தைவிட தமிழில் பிரம்மாண்டமாக எடுக்கத் திட்டமிட்டு உள்ளார். இந்நிலையில் இப்படத்திற்கு கதாநாயகனாக ராகவா லாரன்சிடமும் நாயகியாக அனுஷ்காவிடமும் கால்சீட் கேட்டுள்ளாராம். வெற்றிப் படம் என்பதால், கால்சீட் கிடைப்பதில் எந்தச் சிக்கலும் இருக்காது என்கிறார்கள். மேலும் இப்படத்துக்குத் தமிழில் 'சந்திரமுகி 2' எனப் பெயரி டவும் முடிவு செய்துள்ளாதாக கூறப்படு கிறது.