வளர்தமிழ் இயக்கத்தின் ஆதரவில் தங்கமீன் பதிப்பகம் முழுநாள் நாவல் பயிலரங்கை நடத்துகிறது. இப்பயிலரங்கை எழுத்தாளர் பிரபஞ்சன் வழி நடத்த இருக்கிறார். சிங்கப்பூர் எழுத்தாளர் களும் இதில் பங்கு பெறுகிறார்கள். 10 ஏப்ரல் 2016, ஞாயிற்றுக்கிழமை காலை 9.30 முதல் மாலை 4.30 வரை அங் மோ கியோ பொது நூலகத்தில் இப்பயிலரங்கு நடைபெற இருக்கிறது. ஒரு நாவலுக்கான கருவைத் தேர்ந்தெடுப்பதில் தொடங்கி, கதை, உள்ளடக்கம், கதாபாத்தி ரங்கள், பின்புலம், கதையோட்டம், சிக்கல், சூழல் என ஒரு நாவலைக் கைபிடித்து அழைத்துச் செல்லும் அனைத்து அம்சங் களையும் அலசி ஆராய்ந்து அறிமுகப்படுத்த இருக்கும் பயிலரங்கு இது.
எழுத்தாளர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டு பயனடையலாம். தங்கமீன் வாசகர் வட்டம் ஒருங்கிணைக்கும் இப்பயிலரங்கிற்கான அனுமதி இலவசம். ஆனால், முன்பதிவு அவசியம். முன்பதிவு முடிவுறும் நிலையில் உள்ளது. மாணவர்கள், ஆசிரியர்களுக் கான குறிப்பிட்ட அளவு இடங்கள் மட்டுமே உள்ளன. முதலில் வருபவர்களுக்கு முதலில் என்ற அடிப்படையில் வாய்ப்புகள் கிடைக்கும். பயிலரங்கில் பங்கேற்பவர்களுக்கு மதிய உணவு வழங்கப்படும். thangameen@hotmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு எழுதி, முன்பதிவு செய்து கொள்ள வேண்டும். மேல் விவரங்கள் வேண்டுவோர் 81865530 என்ற எண்ணை அழைக்கலாம்.