கதிரவன்: திரையரங்கு கிடைக்காமல் தவிக்கிறோம்

இயக்குநர் கதிரவன் இயக் கத்தில் உருவான 'கோடை மழை' என்ற படம் அண்மையில் வெளியாகி திரையரங்குகளில் ஓடிக் கொண்டிருக்கிறது. இது நெல்லை மக்களின் வாழ்க்கையை சித்தரிக்கும் படம். நெல்லை மாவட்டத்தின் பேச்சு, வழக்கங்களை இதில் காட்சிப்படுத்தி உள்ளனர். அண்மையில் சென்னையில் இப்படத்தின் செய்தியாளர் சந் திப்பு நடைபெற்றது. இதில் பேசிய இயக்குநர் கதிரவன் சில விஷயங்களைப் பகிர்ந்து கொண் டார். "நான் 'அம்பாசமுத்திரம் அம் பானி', 'வெடி' உள்ளிட்ட ஆறு படங்களுக்கு உதவி இயக்குநராக பணியாற்றியுள்ளேன்.

நெல்லை மக்களின் பேச்சுவழக்கை குறிப்பாக சங்கரன்கோவில் வட்டாரத்தில் நிகழ்ந்த உண்மைச் சம்பவங்களை அடிப்படையாக வைத்து 'கோடை மழை' என்ற படத்தை இயக்கினேன். "படத்தை பார்த்து திரைத்துறை யினர், ஊடக நண்பர்கள் அனைவருமே படம் நன்றாக இருப்பதாகத் பாராட்டினர். பத்திரிகைகள், ஊடகங்களில் வந்த விமர்சனங்கள் அனைத்தும் படத்தை பாராட்டுகின்றன. "இந்தப் படத்தை மிகவும் சிரமப்பட்டு வெளியிட்டு இருக் கிறோம். ஆனால் படத்தை வெளியிடுவதற்கு போதுமான திரையரங்குகள் கிடைக்கவில்லை.

'கோடை மழை' படத்தில் இடம்பெறும் ஒரு காட்சி.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!