இயக்குநர் கதிரவன் இயக் கத்தில் உருவான 'கோடை மழை' என்ற படம் அண்மையில் வெளியாகி திரையரங்குகளில் ஓடிக் கொண்டிருக்கிறது. இது நெல்லை மக்களின் வாழ்க்கையை சித்தரிக்கும் படம். நெல்லை மாவட்டத்தின் பேச்சு, வழக்கங்களை இதில் காட்சிப்படுத்தி உள்ளனர். அண்மையில் சென்னையில் இப்படத்தின் செய்தியாளர் சந் திப்பு நடைபெற்றது. இதில் பேசிய இயக்குநர் கதிரவன் சில விஷயங்களைப் பகிர்ந்து கொண் டார். "நான் 'அம்பாசமுத்திரம் அம் பானி', 'வெடி' உள்ளிட்ட ஆறு படங்களுக்கு உதவி இயக்குநராக பணியாற்றியுள்ளேன்.
நெல்லை மக்களின் பேச்சுவழக்கை குறிப்பாக சங்கரன்கோவில் வட்டாரத்தில் நிகழ்ந்த உண்மைச் சம்பவங்களை அடிப்படையாக வைத்து 'கோடை மழை' என்ற படத்தை இயக்கினேன். "படத்தை பார்த்து திரைத்துறை யினர், ஊடக நண்பர்கள் அனைவருமே படம் நன்றாக இருப்பதாகத் பாராட்டினர். பத்திரிகைகள், ஊடகங்களில் வந்த விமர்சனங்கள் அனைத்தும் படத்தை பாராட்டுகின்றன. "இந்தப் படத்தை மிகவும் சிரமப்பட்டு வெளியிட்டு இருக் கிறோம். ஆனால் படத்தை வெளியிடுவதற்கு போதுமான திரையரங்குகள் கிடைக்கவில்லை.
'கோடை மழை' படத்தில் இடம்பெறும் ஒரு காட்சி.