இளையர்களின் தாக்குப்பிடிக்கும் தன்மையை அதிகரிக்கும் நோக் கத்துடன் புதிய 'அவுட்வேர்ட் பவுண்ட் சிங்கப்பூர்' சாகச பள்ளி கோனி தீவுகளில் அமைக்கப்படும் என நிதி அமைச்சர் ஹெங் சுவீ கியட் வரவு செலவுத் திட்ட உரை யில் அறிவித்தார். இந்த தேசிய வெளிப்புற அருஞ்செயல் கல்விப் பெருந்திட்டத்தை நாடாளுமன்றத் தில் அறிவித்த அமைச்சர், இளையர்கள் வளர்ச்சி காண அவர் களுக்கு தீரச்செயல் சிந்தனை கள், தாக்குப்பிடிக்கும் தன்மை, சிறந்து விளங்க தங்களை சவால் களில் ஈடுபடுத்திக்கொள்ளும் ஆயத்த நிலை முக்கியமாகின்றது என்றார்.
இந்த பண்புகளை மாணவர்கள் வளர்த்துக்கொள்ள, வெளிப்புற அருஞ்செயல் கல்வித் திட்டம் விரிவாக்கப்படும் என்று அமைச்சர் சொன்னார்.சுமார் $250 மில்லியன் செலவில் அமைக்கப்படும் இப் புதிய 'அவுட்வேர்ட் பவுண்ட் சிங் கப்பூர்' சாகசப் பள்ளி 2020 ஆம் ஆண்டிற்குள் தயாராகிவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது சிங் கப்பூரில் அமைக்கப்படும் இரண்டா வது 'அவுட்வர்ட் பவுண்ட் சிங்கப் பூர்' சாகசப் பள்ளியாகும். முதல் பள்ளி 249 ஹெக்டர் நிலப்பரப்பில் புலாவ் உபின் தீவில் அமைந்து உள்ளது. பொதுமக்களுக்கு கடந்த அக்டோபர் மாதம் திறக்கப்பட்ட கோனி தீவின் இயற்கை பூங்கா விற்கு மக்கள் தொடர்ந்து செல்லலாம். பொங்கோல் பிரோனாட் அல்லது பாசிர் ரிஸ் கோஸ்ட் தொழிலியல் பூங்கா-6 வழியே அமைக்கப்பட்ட பாலங்களின் வழியாக கோனி தீவுக்குச் செல்லலாம்.