வி.அருள் ஓஸ்வின்
அனைத்துலக குத்துச்சண்டைச் சங்கத்தின் நடுவராகப் பணியாற்றச் சான்றிதழ் பெற்ற முதலாவது மற்றும் ஒரே சிங்கப்பூரர் என்ற பெருமையை எட்டியுள்ளார், ஸ்டீவ் என்று அழைக்கப்படும் திரு அருணகிரிநாதன், 55. குத்துச்சண்டை, காற்பந்தாட்டம், ஓட்டப்பந்தயம், ஹாக்கி, கபடி என்று இவர் சிறப்பாக விளையாடும் விளையாட்டுகளின் பட்டியலை அடுக்கிக் கொண்டே போகலாம். முழு நேரச் சொத்து முகவராகப் பணிபுரியும் இவர், குத்துச்சண்டை விளையாட்டில் நடுவராகப் பல சாதனைகளைக் குவித்துள்ளார்.
'ஐபா' என்று அழைக்கப்படும் அனைத்துலகக் குத்துச்சண்டைச் சங்கம் ஏற்பாடு செய்த நடுவர் திறன் மேம்பாட்டு வகுப்புகளில் கலந்துகொண்ட அவ ருக்கு மூன்று நட்சத்திர நடுவராக, கடந்த பிப்ரவரி மாதத்தில் அங்கீகாரம் கிடைத்தது. 1993ஆம் ஆண்டு சிங்கப்பூரில் நடந்த தென்கிழக்காசிய விளையாட்டுகளில் குத்துச் சண்டைப் போட்டியின் நேரப் பதிவாளராகத் தொடங்கிய பய ணத்தை மியன்மார், சிங்கப்பூரில் 2013, 2015- ஆண்டுகளில் நடைபெற்ற தென்கிழக்காசிய விளை யாட்டுகளில் நடுவராகத் தொடர்ந்தார்.
ஆஸ்திரேலியாவிலும் சமோவாவிலும் நடைபெற்ற 'ஐபா' அனைத்துலக குத்துச்சண்டை போட்டிகளில் நடுவராக இருந்துள்ளார். 2011 ஆம் ஆண்டு நடைபெற்ற 'ஃபிஃபா' காற்பந்துப் போட்டிகளிலும் நடுவராக இருந்த சிறப்பும் இவருக்கு உண்டு.
அனைத்துலக அளவில் கொரியாவுக்கும் (இடது) ஜப்பானுக்கும் இடையிலான குத்துச்சண்டைப் போட்டியில் நடுவராக இருந்த ஸ்டீவ் (நடுவில்) போட்டியை கவனமாக உற்று நோக்குகிறார். படம்: ஸ்டீவ்