கோவை: தனது கணவரது குடும்பத்தாரை பெற்ற மகளைப் போல் பார்த்துக் கொள்ளப் போவ தாக கலப்புத் திருமணம் செய்த கௌசல்யா தெரிவித்துள்ளார். உடுமலையைச் சேர்ந்தவர் கௌசல்யா. கல்லூரி மாணவியான இவர், தலித் இளையரான சங்கர் என்ற பொறியியல் மாணவரை காதலித்து மணந்தார். இந்நிலையில், அண்மையில் உடுமலையில் வைத்து கௌசல்யா வின் கண்ணெதிரே சங்கர் வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவம் தமிழகத்தையே உலுக்கியுள்ளது. கௌசல்யாவும் படுகாயமடைந்து கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்தநிலையில் சங்கரின் தந்தை வேலுசாமி, இளைய சகோதரர் விக்னேஷ் ஆகியோர் நேற்று முன்தினம் கௌசல்யாவை நேரில் சந்தித்தனர். அப்போது கௌசல்யா தனது மாமனாருக்கு தைரியமூட்டும் வகையில் பேசியதுடன் ஆறுதலும் கூறினார்.
சிகிச்சை முடிந்த கையோடு தனது கணவர் வீட்டிற்கு வரப் போவதாக கௌசல்யா தெரிவித் துள்ளார். தொடர்ந்து கல்லூரிக்குச் செல்லவும் விருப்பம் தெரிவித்தார். "சிகிச்சை முடிந்ததும் நேராக உங்கள் வீட்டுக்கு வந்து விடு வேன். நான் தொடர்ந்து படித்து வேலைக்குச் சென்று உங்களை நன்றாகப் பார்த்துக்கொள்வேன். என்னை மருமகளாக நினைக்க வேண்டாம். உங்களுக்கு மகளாக இருந்து நன்றாகக் கவனித்துக் கொள்கிறேன்," எனக் கூறி கௌசல்யா கண்ணீர் வடித்ததாக ஊடகத் தகவல்கள் தெரிவிக் கின்றன. சங்கர் படுகொலை வழக்கில் கௌசல்யாவின் தந்தை நீதிமன்றத் தில் சரணடைந்துள்ளார். மேலும் ஐவரைக் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இச்சம்பவம் தொடர்பாக மேலும் சிலர் கைதாக வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.