புனித வெள்ளிக்கு முதல்நாள் நடைபெறும் சடங்கின் அங்கமாக கிளமெண்டியில் உள்ள ஹோலி கிராஸ் தேவாலயத்தில் 12 பேரின் கால்களைக் கழுவினார் கத்தோலிக்கப் பேராயர் வில்லியம் கோ. பெண்களும் இந்தச் சடங்கில் பங்கேற்கலாம் என்று போப்பாண்டவர் ஃபிரான்சிஸ் இவ்வாண்டு ஜனவரி மாதத்தில் குறிப்பிட்டதை அடுத்து, இந்தச் சடங்கில் முதன் முதலாக ஆறு பெண்கள் பங்கேற்றனர். இந் நிகழ்ச்சியில் சுமார் 1,200 பேர் கலந்துகொண்டனர். பணிவு, சேவை ஆகியவற்றைக் குறிப்பிடும் இந்தச் சடங்கு, சிலுவையில் அறையப்படுவதற்கு முதல் நாளில் ஏசுநாதர் தமது சீடர்களின் கால்களைக் கழுவியதன் நினைவாகச் செய்யப்படுகிறது.
இதற்கிடையே, "சுவர்களை உடைத்து, பாலங்களைக் கட்டுவதைச் சிறப்பாகச் செய்வோம்," என போப்பாண்டவர் கடந்த ஜனவரி மாதத்தில் சொன்னதைச் சுட்டிக்காட்டி, சமயங் களுக்கிடையான நல்லிணக்கம், புரிதலுக்கு போப்பாண்டவர் வலுவான ஆதரவாளர் என சட்ட, உள்துறை அமைச்சர் கா.சண்முகம் பாராட்டியுள்ளார்.
போப்பாண்டவர் ஃபிரான்சிஸ் கத்தோலிக்கர்களுக்குத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு மூன்றாண்டுகள் நிறைவடைந்த தைக் குறிக்கும் விதமாக இரு வாரங்களுக்கு முன்பு விக்டோரியா ஸ்திரீட்டில் உள்ள செயின்ட் ஜோசஃப்'ஸ் தேவாலயத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்டபோது அமைச்சர் சண்முகம் இதனைக் குறிப் பிட்டார்.
புனித வெள்ளியை முன்னிட்டு மேற்கொள்ளப்படும் சடங்கின் அங்கமாக நேற்று முன்தினம் ஹோலி கிராஸ் தேவாலயத்தில் கால்களைக் கழுவி வெண்ணிறத் துண்டினால் துடைத்தார் பேராயர் வில்லியம் கோ. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்