லாகூர்: பாகிஸ்தானின் லாகூர் நகரில் உள்ள ஒரு பூங்காவில் ஞாயிற்றுக்கிழமை மக்கள் கூடியிருந்தபோது போராளிகள் நடத்திய தற்கொலைத் தாக்கு தலில் உயிரிழந்தவர்களின் எண் ணிக்கை 72 ஆக உயர்ந்துள்ள நிலையில் சிங்கப்பூர், இந்தோனீ சியா உள்ளிட்ட பல நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன. லாகூரில் நடந்த அந்த பயங்கரவாதத் தாக்குதலை சிங்கப்பூர் வன்மையாகக் கண்டிப்பதாக சிங்கப்பூர் வெளியுறவு அமைச்சின் அறிக்கை தெரி வித்தது.
"நாம் அனைவரும் பயங்கரவாத மிரட்டலை எதிர்நோக்குவதையும் இதனால் தொடர்ந்து விழிப்புடனும் மிரட்டலை எதிர்த்துப் போராடும் திடமான நோக் கத்துடனும் இருக்க வேண்டும் என்ற அவசியத்தையும் இத் தாக்குதல் உணர்த்துகிறது," என்று அமைச்சு குறிப்பிட்டுள் ளது. இந்தோனீசிய அதிபர் ஜோக்கோ விடோடோவும் லாகூர் தாக்குதலுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். ஐநா தலைமைச் செயலாளர் பான் கீ மூனும் லாகூரில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலை வன்மையாகக் கண் டிப்பதாகத் தெரிவித்துள்ளார்.
ஆஸ்திரேலியா, பிரிட்டன், கனடா ஆகிய நாடுகளின் பிரதமர்களும் லாகூர் தாக்கு தலுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். லாகூரில் ஞாயிற்றுக்கிழமை ஏராளமானோர் ஈஸ்டர் பண்டிகையை கொண்டாடிக் கொண்டிருந்தபோது குண்டு வெடித்ததில் சிறுவர்கள், பெண்கள் உட்பட குறைந்தது 72 பேர் உயிரிழந்ததாக அதிகாரிகள் கூறினர். அத்தாக்குதலில் குறைந்தது 300 பேர் காயமடைந்த தாகவும் அவர்களில் பலரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ள தால் உயிரிழப்பு விகிதம் இன்னும் அதிகரிக்கக்கூடும் என்று அஞ்சப்படுவதாகவும் அதிகாரி கள் தெரிவித்துள்ளனர்.
லாகூர் தாக்குதலில் காயமடைந்த ஒரு குழந்தையை உறவினர்கள் அவசரமாக மருத்துவமனைக்கு கொண்டு செல்கின்றனர். ஈஸ்டர் பண்டிகையைக் கொண்டாடிக்கொண்டிருந்தவர்கள் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியதில் பலர் கொல்லப்பட்டனர். படம்: ஏஎஃப்பி