தென்னிந்திய வெள்ள நிவார ணத்துக்கு குடியரசின் 69 பள்ளி வாசல்களில் நடத்தப்பட்ட நிதி திரட்டில் மொத்தம் $98,216 சேர்ந் தது. கடந்த டிசம்பர் 18 முதல் 24ஆம் தேதிவரை நிதி திரட்டு இடம் பெற்றது. நன்கொடை திரட் டுக்கு ஏற்பாடு செய்த ரஹ்மத் தான் லில் அலாமின் அறநிறுவ னம், அந்தத் தொகைக்கான மாதிரி காசோலையை நேற்று மெர்சி ரிலீஃப் மனிதாபிமான அமைப்பிடம் ஒப்படைத்தது.
தென்னிந்திய வெள்ள நிவாரணத்துக்கு திரட்டப்பட்ட நிதிக்கான மாதிரி காசோலையை ரஹ்மத்தான் லில் அலாமின் அறநிறுவனத்தின் தலைவர் திரு போஆட் மாத்தார் (வலமிருந்து 2வது) மெர்சி ரிலீஃப் மனிதாபிமான அமைப்பின் ஆலோசகர் திரு அப்துல்லா தர்மூஜியிடம் (இடமிருந்து 4வது) வழங்குகிறார். இடமிருந்து 2வதாக நிற்பவர் ரஹ்மத்தான் லில் அலாமின் அறநிறுவனத்தின் அறங்காவலர்களில் ஒருவரான ஹாஜி முகம்மது ஜலீல். படம்: பெரித்தா ஹரியான்