சிராங்கூன் ரோடு, ஸ்ரீ வீரமாகாளியம்மன் ஆலயத்தில் நிதி நிர்வாகம் தொடர்பில் கடுமையான நிர்வாகச் சீர்கேடு நிலவுவதாக அறநிறுவன ஆணையர் நடத்திய எட்டு மாத விசாரணையில் தெரியவந்துள்ளது. இதையடுத்து, ஆலய நிர்வாகக் குழுத் தலைவர் பதவியிலிருந்து திரு சிவகடாட்சம் தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளார்.
ஆலயத்தின் நிர்வாகக் குழுச் செய லாளர் திரு ராதாகிருஷ்ணன் செல்வகுமார், அறநிறுவனச் சட்டத்தின்கீழ் முன்னர் சில குற்றங்களுக்காகத் தண்டிக்கப்பட்டிருப்ப தால் அந்தப் பொறுப்பை வகிக்க அவர் தகுதியற்றவர் என்று அறநிறுவன ஆணை யர் கூறியுள்ளார். இதையடுத்து, ஆலய நிர்வாகப் பொறுப்பில் இருந்து அவர் நீக்கப் பட்டுள்ளார்.
ஆலயச் சொத்துகளைப் பாதுகாக்க வேண்டிய பொறுப்பில் இருக்கும் நிர்வாகக் குழுவின் முக்கிய உறுப்பினர்கள் தங்களது கடமைகளைக் கவனமாகவும் அறிவார்ந்த வகையிலும் ஆற்றவில்லை என்பது விசா ரணையில் கண்டறியப்பட்டதாக அறநிறு வன ஆணையர் தெரிவித்துள்ளார். ஆலயத்தின் நிதியும் சொத்துகளும் ஆபத்தான முறையில் கையாளப்பட்டதும் விசாரணையில் தெரியவந்தது.