தோக்கியோ: ஜப்பானை நேற்று மீண்டும் உலுக்கிய நிலநடுக் கத்தில் குறைந்தது 32 பேர் உயிரிழந்ததாகவும் நூற்றுக் கணக்கானோர் காயம் அடைந்த தாகவும் ஊடகத் தகவல்கள் கூறின. ஜப்பானில் கியூஷு தீவுப் பகுதியில் நேற்று காலை 7.3 ரிக்டர் அளவு நிலநடுக்கம் உலுக் கியதைத் தொடர்ந்து மீட்புப் பணிகளில் 20,000 ராணுவ வீரர்கள் ஈடுபட்டுள்ளதாக அதி காரிகள் கூறினர்.
ஜப்பானை உலுக்கிய இரண்டு சக்திவாய்ந்த நில நடுக்கங்களால் 400 ஆண்டுகால குமாமோட்டோ அரண்மனையின் சுவர்கள் சேதம் அடைந்ததாக தகவல்கள் கூறுகின்றன. கியூஷு தீவின் கடற்கரைப் பகுதிகளில் உள்ளவர்கள் உடனடி யாக அங்கிருந்து வெளியேறுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டனர். நிலநடுக்கத்தின்போது இடிந்து விழுந்த கட்டடங்களின் இடிபாடு களில் இன்னும் பலர் சிக்கியிருப் பதாக அஞ்சப்படுகிறது. அவர் களைக் காப்பாற்றும் பணியில் மீட்புக் குழுவினர் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர். இடிபாடுகளில் சிக்கியிருப் பவர்கள் எந்த இடத்தில் சிக்கியுள் ளனர் என்பதை அறிந்து கொள்ள மேப்ப நாய்கள் உதவியுடன் மீட்பு குழுவினர் இரவு, பகலாக பணியாற்றி வருகின்றனர்.
அடுத்தடுத்து உலுக்கிய நிலநடுக்கங்களால் ஜப்பானின் தெற்கில் உள்ள குமாமோட்டோ பகுதி பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. மஷிகி நகரில் பல இடங்களில் தரையில் வெடிப்புகள் ஏற்பட்டுள்ள நிலையில் மீட்புக் குழுவைச் சேர்ந்த ஒருவர் மீட்புப் பணிகளுக்கு உதவ விரைந்து செல்கிறார். மினாமியாசோ நகரின் தெருக்களிலும் வாகனம் நிறுத்தும் இடங்களிலும் வெடிப்புகள் ஏற்பட்டுள்ளன. படம்: ஏஎஃப்பி