ஹைதராபாத்: தெலுங்கானா மக் களுக்கு ஆண்டுக்கு ஒரு லட்சம் பசுக்கள் இலவசமாக விநி யோகிக்கப்படும் என்று பாஜக தனது தேர்தல் அறிக்கையில் தெரிவித்துள்ளது. வரும் டிசம்பரில் தெலுங்கானா மாநிலத்தில் சட்ட மன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது. கடந்த சனிக்கிழமை பேசிய பாஜகவின் தேர்தல் அறிக் கை குழுவின் தலைவர் என்.வி. எஸ்.எஸ். பிரபாகர், தெலுங்கானா சட்டமன்றத் தேர்தலில் பாஜக வெற்றி பெற்றால் கிராமங்களில் பண்டிகை உள்ளிட்ட காலங்களில் மக்கள் கோரும்போது அவர்களுக்கு இலவச பசுக்கள் விநி யோகிக்கப்படும் என்றார்.
மொழிகள் நல வாரியம் ஒன்று அமைக்கப்படும் என்று குறிப்பிட்ட அவர், இங்கு பிழைப்பு தேடி வரும் மற்ற மாநிலத்தைச் சேர்ந்த மொழி ரீதியான சிறுபான்மையினருக்கு இது உதவும் என்று கூறினார். பண்டிகைக் காலங்களில் அரசு பேருந்து கூடுதல் கட்டணம் ரத்து, தீட்சை எடுப்பதற்காக சபரிமலை உள்ளிட்ட கோயில்களுக்குச் செல் வோருக்கு இலவச போக்குவரத்து வசதி, பெட்ரோல், டீசல் மீதான வரி விலக்கு, போட்டித் தேர்வு களுக்குத் தயாராகும் இளை ஞர்களுக்குப் பயிற்சி, வீட்டுக்கு மாதம் ரூ.6க்குப் பாதுகாப்பான குடிநீர் விநியோகம் உள்ளிட்ட பல திட்டங்கள் உள்ளன என்று பிர பாகர் கூறினார். ஆனால் தெலுங் கானா பாஜக தேர்தல் அறிக்கையை இன்னும் அதிகாரபூர்வமாக வெளி யிடவில்லை.