இவ்வாரம் நடைபெறும் ஆசியான் உச்சநிலைக் கூட்டத்தால் சாங்கி விமான நிலையத்தில் பயணிகள் தாமதங்களை எதிர்நோக் கலாம். உலகத் தலைவர்கள் பலர் தங்களது அதிகாரபூர்வ விமானங் களிலோ அல்லது சொந்த விமானங்களிலோ இங்கு வருவ தாகவும் இவற்றில் சுமார் 20 சாங்கியில் தரையிறங்கும் என்று 'ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்' நாளிதழ் தெரிவித்தது. "ஆசியான் உச்சநிலைக் கூட் டத்திற்கான விமான வருகை களால் வர்த்தக விமான பயணங்களில் பெரிய தாமதங்கள் ஏற்படாது என்பது எங்கள் கருத்து," என்று திரு ரொஸ்லி சாட் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சிடம் தெரிவித்தார்.
இத்தகைய சூழல்களைச் சமா ளிப்பதற்கான செயலாக்க முறை களும் பிரச்சினைகளைத் தீர்க்கும் வழிமுறைகளும் ஏற்கெனவே நிறு வப்பட்டிருப்பதாக அவர் கூறினார். சாங்கி விமான நிலையத்தில் வழக்கமாக ஒரு நேரத்தில் ஒரே ஒரு விமானம் தரையிறங்குவதற்கு பதிலாக இரு விமானங்கள் சாங்கியின் இரண்டு ஓடுபாதை களிலும் இறங்கலாம். சாங்கியின் விமான போக்கு வரத்துக் கட்டுப்பாட்டு அதி காரிகள், மற்ற விமான நிலையங் களிலுள்ள அதிகாரிகளுடன் ஒத்துழைத்து, சிங்கப்பூருக்கு வந்துபோகும் விமானப் பயணங் களை மேலும் நல்ல முறையில் நிர்வகித்து பயண தாமதங்களைக் குறைக்க முனைவர். இரண்டாவது விமான முனை யத்திற்கு அருகிலுள்ள மிக முக்கிய பிரமுகர்களுக்கான வளா கத்தில் இந்த விமானங்கள் சாங்கியில் தரையிறங்கிய பின் னர், வர்த்தக பயண விமானங் களுக்கான வாயில்களிலிருந்து தொலைவாக உள்ள நிறுத்தங் களில் நிறுத்தப்படும்.
ஆசியான் உறுப்பு நாடுகளின் தலைவர்களைத் தவிர, முக்கிய பங்காளித்துவ நாடுகளின் உறுப்பினர்களும் சிங்கப்பூருக்கு வந்து மாநாட்டில் கலந்துகொள்வர். ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசன், இந்தியப் பிரதமர் நரேந் திர மோடி, சீனப் பிரதமர் லீ கெகியாங், ஜப்பானியப் பிரதமர் ஷின்சோ அபே, நியூசிலாந்து பிரதமர் ஜெசிண்டா ஆர்டர்ன், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புட்டின், அமெரிக்க துணை அதிபர் மைக் பென் ஆகிய உலகத் தலைவர்கள் இதில் கலந்துகொள்வர்.