அரியானா: அரியானா அரசு மருத் துவமனைக்கு விபத்தில் சிக்கிய ஒருவரை காயத்துடன் அழைத்து வந்தபோது, அந்த மருத்துவ மனையில் பணியாற்றும் ஊழியர் ஒருவரே அவரது காயத்தில் மருந்து வைத்து, தையல் போட்டு விடும் காட்சிகள் சமூக வலைத் தளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. அரியானாவில் உள்ள ரோத்தக் அரசு மருத்துவமனைக்கு விபத் தில் காயமடைந்த ஒருவர் அழைத்து வரப்பட்டார்.
வலியில் துடித்துக்கொண் டிருந்த தனக்கு வலி நிவாரணி மருந்துகள் எதுவும் வழங்கப்பட வில்லை என்றும் மருத்துவர் வேடிக்கை பார்த்துக்கொண்டி ருக்க ஊழியர் ஒருவர் தையல் போட்டுவிட்டதாகவும் காயம் அடைந்த ஜோஹிந்தர் குமார் குற்றம்சாட்டியுள்ளார். "ஐந்தாம் வகுப்பு படித்த காக்கி சீருடையில் இருந்த ஆடவரை ரத்தம் சொட்டும் காயத்தில் தையல் போடச் சொன்ன டாக்டர் அதை பக்கத்திலிருந்து வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தார்," என்றார். என்னுடன் வந்திருந்த என் நண்பன் இதைக் காணொளியாக எடுத்து சமூக வலைத்தளத்தில் பரவவிட்டுள்ளான். அரசாங்க மருத்துவமனையின் நிலைமை இதுதான் என்று ஜோஹிந்தர் குமார் கூறியுள்ளார்.
மருத்துவர் வேடிக்கை பார்க்க காயத்தில் தையல் போடும் ஊழியர். படம்: ஊடகம்