ப. பாலசுப்பிரமணியம்
சிங்கப்பூரில் புகழ்பெற்றுத் திகழும் உறுமிமேளக் குழுக்களில் ஒன் றான 'சிவசக்தி முனியாண்டி உறுமிமேளக் குழு', தைப்பூசத் திரு விழாவுக்குத் தயாராகி வருகிறது. வரும் ஞாயிற்றுக்கிழமை தைப் பூச தினத்தன்று சிராங்கூன் சாலையில் அமைந்துள்ள பெருமாள் கோயிலில் காலை 7 மணியிலிருந்தே அக்குழு உறுமி மேளம் இசைக்கத் தொடங்கி விடும்.
ஆஸ்திரேலியா, அமெரிக்கா போன்ற நாடுகளுக்குச் சென்று வாசித்துள்ள இந்த 16 பேர் கொண்ட இசைக்குழு, தைப்பூசத்திற்கு ஆயத்தமாய் ஒவ்வொரு ஞாயிற்றுக் கிழமையும் பயிற்சி செய்து வருகிறது. தைப்பூசம், பங்குனி உத்திரம் போன்ற பிரதான விழாக்களில் வாசிப்பது தம் குழுவினருக்கு முக்கியமானது என்று வலியுறுத்திய இக்குழுவின் தலைவர் திரு நவின் குமார் இளங்கோவன், கோயில் நிகழ்ச்சிகளில் மேளம் வாசிக்க தமது குழுவுக்கு வாய்ப்புகள் வந்த வண்ணம் உள்ளது என்றார்.
தைப்பூசத் திருநாளில் உறுமி மேளம் வாசிப்பது குறித்து இங்கு உள்ள உறுமிமேளக் குழுக்கள் ஒரு சந்திப்புக் கூட்டத்தை நடத்தி அதில் தைப்பூசத் திருவிழாவில் கலந்துகொள்வதற்கான விதி முறைகளுக்கு கட்டுப்படுவதற்குச் சம்மதம் தெரிவித்துள்ளதை திரு சந்திரசேகரன் சுட்டிக்காட்டினார். இந்து அறக்கட்டளை வாரியம் கொடுத்த தகவல்படி, இதுவரை யில் மொத்தம் 11 உறுமிமேளக் குழுக்கள் தைப்பூசத் திருநாளில் வாசிக்கும் அனுமதி பெற்றுள்ளன.