அடுத்த மாதம் கிறிஸ்மஸ் பண்டிகையை முன்னிட்டு 4 படங்கள் வெளியீட்டுக்குத் தயாராக இருக்கின்றன. விஜய் சேதுபதியின் 'சீதக்காதி', ராஜீவ் மேனன் இயக்கத்தில் ஜி.வி.பிராஷ் நடிக்க, ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைத்துள்ள 'சர்வம் தாள மயம்' விஷ்ணு விஷாலின் 'சிலுக்குவார்பட்டிச் சிங்கம்', ஆர்.கண்ணன் இயக்கத்தில் அதர்வா நடித்துள்ள 'பூமராங்' ஆகிய படங்கள்தான் அவை. இந்த நான்கு படங்களுக்குத் தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் வெளியீடு ஒழுங்குமுறை சங்கம் வெளியீடு செய்ய அனுமதி அளித்துவிட்டது.
ஆனால் தனுஷின் 'மாரி 2' படத்தை கிறிஸ்துமஸ் விடுமுறைக்கு வெளியீடு செய்ய இதுவரையிலும் அனுமதி கிடைக்கவில்லை. அதை எதிர்த்து கிறிஸ்துமஸ் விடுமுறை நாட்களை முன்னிட்டு டிசம்பர் 21ஆம் தேதியே 'மாரி=2' படத்தை வெளியிடுவோம் என்று 'வுண்டர்பார்' நிறுவனம் அறிவித்துள்ளது. இதேபோல் சிவா, சதீஷ், கலைராணி, ஐஸ்வர்யா மேனன், திஷா பாண்டே, சந்தான பாரதி, ஆர். சுந்தரராஜன், மனோபாலா, சேத்தன், நிழல்கள் ரவி ஆகியோர் நடித்த 'தமிழ்படம்-2' படமும் சங்கத்தின் கட்டுப்பாட்டை மீறி வெளியானது குறிப்பிடத்தக்கது.