இந்தியாவில் கேரள மாநிலத்தில் இருக்கும் புகழ்பெற்ற சபரிமலை கோயிலில் போலிசார் அளவுக்கு அதிக கட்டுப்பாடுகளை விதிப்ப தாகக் கூறி ஞாயிற்றுக்கிழமை இரவு அந்தக் கோயிலுக்குள் பக் தர்கள் போராட்டத்தில் ஈடுபட்- டனர். அதனையடுத்து பலரையும் கைதுசெய்து பிணையில் வெளிவர முடியாத பிரிவுகளில் வழக்குப் பதிந்து போலிஸ் அவர்களைச் சிறையில் அடைத்துவிட்டது. பக்தர்கள் சுமார் 100 பேர் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டது. போலிசின் இந்தச் செயலை பல அரசியல் கட்சிகளும் ஐயப்ப பக்தர்கள் சங்கமும் கடுமையாகக் கண்டித்து இருக்கின்றன.
இந்த நிலையில் கோபமடைந்த பக்தர்கள் ஆதூர் என்ற இடத்தில் நேற்று அரசுப் பேருந்தை எரித்து விட்டார்கள். கற்களை வீசியும் தாக்கினர். இதனிடையே, சபரிமலை கோயிலின் நிர்வாக சபை நேற்று உச்ச நீதிமன்றத்தை நாடியது. அனைத்து வயதுப் பெண் களையும் கோயிலுக்குள் அனு- மதிக்க வேண்டும் என்று பிறப் பிக்கப்பட்டு இருக்கும் உத்தரவை நிறைவேற்ற தனக்குக் கால அவகாசம் வழங்கும்படி அந்த நிர்வாக சபை நீதிமன்றத்தைக் கேட்டுக்கொண்டதாகவும் தெரி விக்கப்பட்டது.
இவ்வேளையில், நேற்று சபரி மலை கோயில் விவகாரம் தொடர் பான மனு ஒன்றை கேரள உயர் நீதிமன்றம் விசாரித்தது. அந்தக் கோயிலுக்குள் பக்தர்- களுக்கு எதிராக மாநில அர சாங்கம் எடுத்து வரும் நடவடிக்- கைகளைக் கண்டித்து மாநிலத் தின் ஆக உயரிய சட்ட அமலாக்- கத் துறை அதிகாரி உடனடியாக நீதிமன்றத்தில் முன்னிலையாக வேண்டும் என்று உத்தரவு பிறப் பித்தது.
கேரளாவில் அமைந்துள்ள சபரிமலை கோயிலில் போலிசார் அளவுக்கு அதிகமான கட்டுப்பாடுகளை விதித்து இருப்பதாகக் கூறி அதை எதிர்த்து ஆர்ப்பாட்டம் நடத்திய பக்தர்களை போலிசார் தடுத்துப் பிடித்து கைது செய்தனர். படம்: இந்திய ஊடகம்