சிலேத்தார் விமான நிலையத்தில் தரையிறங்கும் விதிமுறைகள் பற் றிய தேர்ந்தெடுக்கப்பட்ட ஆவ ணங்களை சிங்கப்பூர் வெளியிட் டது என்று மலேசிய போக்குவரத்து அமைச்சு நேற்று மாலை ஊடக அறிக்கையில் தெரிவித்தது. அதற்குப் பதிலளிக்கும் வகை யில் சிங்கப்பூர் போக்குவரத்து அமைச்சு நேற்று மாலை வெளி யிட்ட பதில் அறிக்கையில், "தரை யிறங்கும் விதிமுறைகள் பற்றிய ஆவணங்களை வெளியிடுவதற்கு முன் 2017 டிசம்பரில் மலேசிய சிவில் போக்குவரத்து ஆணையத் திடம் ஆலோசனை பெறப்பட்டதா என்று ஊடகங்கள் எழுப்பிய கேள்விகளுக்குப் பதிலளிக்கவே நாங்கள் டிசம்பர் 4ஆம் தேதி ஆவணங்களை வெளியிட வேண் டியதாயிற்று என்று சிங்கப்பூர் போக்குவரத்து அமைச்சு கூறியது.
"இதுதொடர்பான விவகாரம் தங்களுக்கு இரண்டு மாதங்க ளுக்கு முன்னர்தான் தெரியவந்தது என்று மலேசியத் தரப்பு கடந்த ஆக்டோபர் மாதம் தவறான தக வலை வெளியிட்டது. இதன் கார ணமாகத்தான் ஊடகங்கள் கேள்வி எழுப்பின," என்று சிங்கப் பூர் போக்குவரத்து அமைச்சு கூறி யது.
"இருதரப்புகளுக்கு இடையி லான பேச்சுவார்த்தை விவரங்கள் ரகசியமாக வைத்துக்கொள்ளப்படு வது நன்மை பயக்கும் என்பது சிங்கப்பூரின் கருத்து. இதன் கார ணமாகத்தான் இந்த விவகாரம் தொடர்பில் சிங்கப்பூருக்கும் மலே சியாவுக்கும் இடையிலான கடிதத் தொடர்புகளில் முன்னர் வெளி யிட்ட ஆவணங்களைத் தவிர வேறு எவற்றையும் நாங்கள் வெளி யிடவில்லை. இதே கருத்தைதான் மலேசிய போக்குவரத்து அமைச்சர் ஆண்டனி லோக் டிசம்பர் 4ஆம் தேதி தெரிவித்தார்," என்றும் சிங்கப்பூர் போக்குவரத்து அமைச்சு விளக்கியது. "இதற்கிடையே, இந்த விவ காரம் தொடர்பில் தங்கள் தரப்பி லும் ஆவணங்களை வெளியிடு வோம் என்று மலேசியா கூறினால், அதற்கு நாங்கள் ஆட்சேபம் தெரி விக்க மாட்டோம்.