மணிப்பூர் இளம் வீரர் ரெக்ஸ் ராஜ்குமார் சிங் 10 விக்கெட்டுகள் எடுத்து புதிய சாதனையைப் படைத்து பலரின் கவனத்தை ஈர்த்துள்ளார். ஆனந்தபூரில் நடைபெற்ற கூச் பெஹர் யு=19 போட்டியில் அருணாசல பிரதேசத்துக்கு எதிரான ஆட்டத்தில் 9.5 ஓவர்கள் வீசி 11 ஓட்டங்கள் கொடுத்து எதிரணியின் அனைத்து விக்கெட்டுகளையும் எடுத்துள்ளார் ரெக்ஸ் சிங். அருணாச பிரதேச அணி ரெக்ஸ் சிங்கின் அசத்தலான பந்து வீச்சில் இரண்டாவது இன்னிங்ஸில் 36 ஓட்டங் களுக்குச் சுருண்டது. இதை யடுத்து இந்த இலக்கை 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றது மணிப்பூர் அணி. 18 வயது இடக்கைப் பந்து வீச்சாளரான ரெக்ஸ் சிங்கின் 10 விக்கெட்டுகளில் ஐந்து விக் கெட்டுகள் க்ளீன் போல்ட் செய்ததன் மூலம் கிடைத்தன. மூன்று முறை ஹாட்ரிக் விக்கெட் எடுக்கும் வாய்ப்பு அவருக்குக் கிடைத்தன. ரெக்ஸ் சிங் 10 விக்கெட்டுகள் எடுத்த ஆட்டத்தின் காணொளி யை பிசிசிஐ வெளியிட்டுள்ளது. அதையடுத்து சமூகவலைத் தளங்களில் பலரும் அதைப் பகிர்ந்து வருகிறார்கள்.
18 வயது மணிப்பூர் வீரர் 10 விக்கெட்டுகள் எடுத்து சாதனை
14 Dec 2018 10:22 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 15 Dec 2018 08:34
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
"ஆற்று தமிழ்த் தொண்டு, நுண்ணறிவு ஆற்றல் கொண்டு": மாணவர்களுக்கான போட்டி
சாங்கி விமான நிலையம் முனையம் 2ல் புதிய ஹோட்டல்
சப்தஸ்வரம் காணொளித் தொடர், நான்காம் பாகம் - மிருதங்க கலைஞர், கல்லிடைக்குறிச்சி சு சிவகுமாரின் 47 வருட கலைப் பயணம்
பாகிஸ்தானைச் சேர்ந்த 19 வயது பெண்ணுக்கு சென்னையில் இதய மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
ஏப்ரில் 25, 2024, இன்றைய ஐந்து முக்கிய செய்திகள்
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!