ஜிட்ரா: தானியங்கி வங்கி இயந்திரத்தை குண்டு வைத்துத் தகர்த்து விட்டு 300,000 ரிங்கிட் பணத் தைக் கொள்ளையடித்துக் கொண்டு இருவர் தப்பியோடிய சம்பவம் ஜிட்ராவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நேற்று அதிகாலையில் நடந்த அந்தச் சம்பவம் அங்கிருந்த கண் காணிப்புப் புகைப்படக் கருவியில் பதிவாகியிருந்தது. அதனைக் கண்ட குபாங் பாசு மாவட்ட போலிஸ் தலைமைக் கண்காணிப்பு அதிகாரி அப்துல் ரகிம் அப்துல்லா, அந்தக் குற்றச் செயல் காலை 5.04மணிக்கு நடந்ததாகவும் 'டொயோட்டா கேம்ரி' காரில் வந்த முகமூடியணிந்த இரண்டு ஆடவர் அதனைச் செய்தனர் என்றும் தெரிவித்தார்.
இரும்புக் கம்பியை வைத்து நெம்பி இயந்திரத்தின் மேல், கீழ் பகுதிகளை அகட்டினர். அதன் பிறகு ஓரடி நீள குழாய் குண்டு வைத்து அந்த தானியங்கி வங்கி இயந்திரத்தை அவர்கள் தகர்த்ததாகத் தெரி கிறது. அரையடி நீள குழாய் குண்டுடன் சிதறிக்கிடந்த 600 ரிங்கிட் பணமும் சம்பவ இடத்திலிருந்து எடுக்கப்பட்டன என்று அப்துல் ரகிம் அப்துல்லா செய்தியாளர்களிடம் தெரிவித் தார். தானியங்கி வங்கி இயந்திரத் தின் கண்ணாடிக் கூண்டும் குண்டு வெடித்ததில் உடைந்து சிதறியிருந்தது. இந்த சம்பவத்தினால் உயிர் உடல் சேதமில்லை என்று தெரிவிக்கப்பட்டது. குண்டு வெடித்தபோது மிக பயங்கர ஓசையை எழுப்பியது என்று சம்பவ இடத்திலிருந்து 200 மீட்டர் தொலைவில் உள்ள ஒரு கடையின் உரிமையாளரான 40 வயதாகும் தேவி என்ற பெண்மணி கூறினார்.
முகமூடி அணிந்து காரில் வந்த இருவர் குண்டு வைத்துத் தகர்த்ததால் சேதமான தானியங்கி வங்கி இயந்திரம். படம்: த ஸ்டார்