சுங்கை காடுட்டில் உள்ள அறைகலன் கிடங்கு ஒன்றில் நேற்று அதிகாலை பெரும் தீ விபத்து ஏற்பட்டது. தீயணைப்பு வீரர்கள் 90 பேர் நான்கு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். படம்: சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை
சுங்கை காடுட்டில் உள்ள அறைகலன் ஆலையில் நேற்று அதிகாலை தீச்சம்பவம் நேர்ந்தது. 31 சுங்கை காடுட் ஸ்திரீட்டில் நடந்த இந்தச் சம்பவம் பற்றிய தகவல் பின்னிரவு 3 மணிக்குக் கிடைத்ததாக சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை தெரிவித்தது. அறைகலன் ஆலை முழுவும் தீ பரவியிருந்ததை அங்கு சென்றிருந்த தீயணைப்பு அதிகாரிகள் கண்டனர். உடனே தனது படையினர் தீயணைப்புப் பணியில் ஈடுபட்டனர். "இதில் மொத்தம் 25 அவசரகால வாகனங்களுடன் சுமார் 90 தீயணைப்பாளர்களும் ஈடுபடுத்தப்பட்டனர். நீரைப் பீய்ச்சியடிக்கும் 12 சாதனங்கள் பயன்படுத்தப்பட் டன. நான்கு மணி நேரத்தில் தீ முற்றிலும் அணைக்கப்பட் டது," என்று படை குறிப்பிட்டது. சம்பவத்தில் எவரும் காயமடையவில்லை. விசாரணை தொடர்வதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.