ரஜினிகாந்த், விஜய் சேதுபதி உள்ளிட்ட நட்சத்திரங்கள் திரளாக இடம்பெறும் 'பேட்ட' திரைப்படம் தனக்கு சினிமா வாழ்க்கையில் மறுமலர்ச்சியை ஏற்படுத்தியதாக சிம்ரன் தெரிவித்திருக்கிறார். கடந்த ஆண்டுகளாக மந்தமாக இருந்த பட வாய்ப்புகள் இந்தத் திரைப்படத்திற்கு அடுத்து பெருகி வருவதாக அவர் கூறினார்.
நடிகர்களை நன்றாக பயன்படுத்துவது எப்படி என கார்த்திக் சுப்புராஜ்ஜுக்கு நன்றாக தெரியும் என்று சிம்ரன் கூறினார். மேலும், தான் ஒரு ரஜினி ரசிகை என்றும் அவரது பாவனைகளால் ஈர்க்கப்படுவதாகவும் சிம்ரன் கூறினார். படப்பிடிப்பின்போது பதற்றம் அடைந்ததாகவும் தன்னை ரஜினிகாந்த் சமாதானப்படுத்தியதாகவும் சிம்ரன் கூறினார்.